முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்கள் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.  ஜனாதிபதி ஒபாமாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் எப்–16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய பரிந்துரை செய்தது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் என்று பென்டகன் கூறியது. எப்–16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய ஒபாமா நிர்வாகம் முடிவு செய்தது. பாகிஸ்தானுக்கு எட்டு எப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்கிறது. இது இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒபாமா நிர்வாகம் முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தூதரை நேரில் வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது. இந்தியாவின் எதிர்ப்பை மீறிம், பாகிஸ்தானுக்கு விமானங்களை விற்பனை செய்வதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு அந்நாட்டு எம்.பி.க்கள் கவலையை தெரிவித்து இருந்த நிலையில் விமானங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக அமெரிக்காவும் அறிவிக்கையை வெளியிட்டது. 

கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அமெரிக்க பாராளுமன்ற செனட்சபை ஒபாமாவின் முடிவுக்கு தற்காலிகமாக முட்டுக்கட்டை போட்டது.  தற்போது பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்கள் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். வாஷிங்டனில் பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியின் ஆசிய, பசிபிக் பிரிவுக்கான துணைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி., மேத் சால்மன் பேசுகையில், ”எப்-16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது, என்னையும், பிற எம்.பி.க்களையும் கேள்வி கேட்க வைத்துள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிராக இந்த எப்-16 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுவதை விட இந்தியா மற்றும் பிற பிராந்திய நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த முடியும். எனவே இந்த முடிவை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று கூறினார். ”பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி, போர் விமானங்கள் விற்பனை என்பது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்குகிற ஆயுதங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்குத் தானே தவிர, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அல்ல,” என்று ஜனநாயக கட்சி எம்.பி., பிராட் ஷெர்மேன் கூறினார்.

கூட்டத்தில் ஒபாமா அரசின் சார்பில் பங்கேற்ற சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஆல்சனிடம், சல்மான் பேசுகையில், பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்வதின் நோக்கம் என்ன? அமெரிக்காவுக்கு எந்த விதத்தில் இது நன்மை பயக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.  பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவிகளை செய்கிறது. இருப்பினும் பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு தான் வருகிறது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் இந்தியாவிற்கு தாக்குதல் நடத்தி உயிர் பலியை ஏற்படுத்துகின்றனர். பாகிஸ்தான்  தீவிரவாதத்தையும், தீவிரவாத குழுக்களையும் இந்தியாவிற்கு எதிரான உபகரணம் போன்று பயன்படுத்துகிறது,” என்று குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்