முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூல் தாக்குதல் மூளையற்ற வன்முறையாகும் : பிரதமர் மோடி கண்டனம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  காபூலில் நடந்த தாக்குதல் மூளையற்ற தாக்குதல் என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே போலீசாரை ஏற்றிச்சென்ற ரோந்து பஸ்களை தலிபானதீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கியுள்ளார்கள். இந்த தாக்குதலில் 27போலீசார் இறந்தனர் .40பேர் காயம் அடைந்தார்கள்.

காபூலில் கடந்த வாரம் கனடா தூதரகத்தை பாதுகாக்கும் பணிக்கு சென்ற 14 நேபாள பாதுகாவலர்கள் தீவிரவாதிகளின்  குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்கள்.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலைத்தொடர்ந்து தற்போது மிகப்பெரும் உயிரிழப்பினை ஏற்படுத்தும் தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் நடத்தியிருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மூளையற்ற தாக்குதல் என்று அவர் விமர்சித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்