முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஒரு வாரத்தில் 15 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொலை : பி.எஸ்.எப். தகவல்

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

 ஸ்ரீநகர்  -  இந்த மாதம் 21ம் தேதி முதல் ஒரு வார காலத்தில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள பி.எஸ்.எப். படை தெரிவித்தது.  கடந்த ஒரு ஆண்டில் பாகிஸ்தான் வீரர்கள் மிக மோசமான முறையில் போர் நிறுத்த விதிகளை மீறி இந்திய நிலைகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அவர்கள் சர்வதேச எல்லை கோடு உள்பட ஜம்மு முழுவதும் தங்கள் வரையறையை தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள பி.எஸ்.எப் வீரர்கள்  பதிலடி தந்து வருகிறார்கள். அவர்கள் இந்த மாதம் 21ம் தேதி முதல் ஒரு வார காலத்தில் 15 பாகிஸ்தான் வீரர்களை கொன்றுள்ளனர்.

இது குறித்து பி.எஸ்.எப். துணை ஐ.ஜி தர்மேந்திரா பரீக் கூறுகையில்,  சர்வ தேச எல்லைக்கோடு பகுதியில் நாங்கள் அதிக அளவிலான துப்பாக்கிச்சூட்டினை காண வேண்டியிருந்தது. பாகிஸ்தான் வீரர்களின் போர் நிறுத்த விதி முறை மீறல் காரணமாக சர்வதேச கோடு(ஐ.பி) செல்லும் 192 கிலோ மீட்டர் தூரம் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.எல்லை பகுதியில் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என பி.எஸ்.எப் படையினர் தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்