எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.
இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம். இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது. மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான். உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு. அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.
நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித்தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது. சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால் இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.
சிறுநீரகம் சரியாக செயல்படாமல் இருபதின் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்:
சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர்களுக்கும், மது போதை பொருட்கள் உட்கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தைக் காக்க: * உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். * புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக்கூடாது. * அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். * எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது. * தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. * வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்க: சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
மறைந்த குமரி அனந்தனுக்கு தமிழக தலைவர்கள் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 23 பேர் உயிரிழப்பு
09 Apr 2025காஸா : காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்
-
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் - இ.பி.எஸ். அஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
09 Apr 2025டெல்லி : காட்பாடி - திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில் வழிப்பாதையை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
09 Apr 2025சென்னை : நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம் : இந்தோனேசி அதிபர் அறிவிப்பு
09 Apr 2025காஸா : காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
-
மேற்குவங்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மம்தா
09 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறினார்.
-
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
09 Apr 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
கான்வே மோசமான சாதனை
09 Apr 2025ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
-
சென்னைக்கு எதிராக சதம்: பிரியன்ஷ்-க்கு ஷ்ரேயாஸ் புகழாரம்
09 Apr 2025சண்டிகர் : ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பேட்டிங் என்றும், சதமடித்த பிரியன்ஷ் ஆர்யாவுக்கு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மேலும் 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை
09 Apr 2025ராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
-
சி.எஸ்.கே. தொடர் தோல்விகள்: பயிற்சியாளர் பிளெமிங் விளக்கம்
09 Apr 2025முல்லன்பூர் : சி.எஸ்.கே. தொடர் தோல்விகள் குறித்து பயிற்சியாளர் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
புள்ளிப்பட்டியல்....
-
தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையை கொன்ற தாயை கைது
09 Apr 2025காந்திநகர் : அழுது கொண்டு இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
-
நடத்தை விதியை மீறியதற்காக பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு 25 சதவீதம் அபராதம்: பி.சி.சி.ஐ.
09 Apr 2025சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-04-2025
10 Apr 2025 -
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள்: வரும் 16-ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
10 Apr 2025புதுடெல்லி, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை வரும் 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
சென்னை பனையூரில் விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
10 Apr 2025சென்னை, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
-
பாட்டியாலா நீதிமன்றத்தில் ராணா ஆஜர்: நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
10 Apr 2025புதுடெல்லி, மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போல
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: 2 நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 2,680 உயர்வு
10 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.
-
அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை ஏன்? மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
10 Apr 2025சென்னை, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
-
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
10 Apr 2025சென்னை, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
காகிதமில்லா சட்டசபையாக புதுச்சேரி அறிவிப்பு
10 Apr 2025புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதமில்லா சட்டப் பேரவையாக அறிவித்து துவக்கவிழாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரை அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது
-
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு "சமத்துவம் காண்போம்" போட்டிகள்: தமிழக அரசு அழைப்பு
10 Apr 2025சென்னை, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் பல்வேறு போட்டிகள்
-
மாணவியை வெளியே உட்கார வைத்த விவகாரம் கோவை தனியார் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்
10 Apr 2025கோவை, பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்
-
தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்வு: அமித்ஷா இன்று ஆலோசனை
10 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்.