எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் ஒன்றியம் பள்ளக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணன் ஆகியோர் மரணமடைந்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20லட்சம் நிவாரண நிதியை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.
ராணுவவீரர் சுந்தரபாண்டி மரணம்;: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி-தமிழச்செல்வி தம்பதியரின் மகன் சுந்தரபாண்டி(25).விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக பல்வேறு தியாகங்கள் செய்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணமாகி சிவபிரியா என்ற மனைவி உள்ளார்.சிவபிரியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் சில நாட்களாக ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 25ம் தேதி பந்திப்போரா மாவட்டம்,குரெஸ் செக்டாரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.இந்த பனிச்சரிவில் ராணுவவீரர்கள் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டியின் சடலமும் இருந்ததை மீட்புபடையினர் கண்டுபிடித்து மீட்டனர். ராணுவவீரர் தாமோதரகண்ணன் மரணம்: இதனிடையே மீட்பு படையினர் மோப்பநாய்கள் உதவியுடன் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் பனிச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5ராணுவ வீரர்hகளை மீட்டு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5ராணுவவீரர்களும் உயிரிழந்தனர்.
இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரது மகனான தாமோதரகண்ணன்(26) என்பவர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.டிப்ளமோ பட்டதாரியான தாமோதரகண்ணன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் சேர்ந்ததும் தற்போது காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகில் உள்ள ராணுவமுகாமில் பீரங்கிபடையில் வீரராக பணியாற்றி வந்துள்ளார்.தற்போது பனிச்சரிவில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவரது சகோரார் ஹரீஷ்குமார் என்பவர் தற்போது இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி வருகின்றார். தலா 20லட்சம் நிவாரணநிதி அறிவிப்பு: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டிமற்றும் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் சுந்தரபாண்டி ஆகிய இருவர் பணிச்சரிவில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்ததை தொடர்ந்து இவ்விரு கிராமங்களும் சோகத்தில் மூழ்கின.மேலும் உடல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படும் வரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,கூட்டமாக திரண்டிருந்த கிராமமக்கள் கதறியழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்;பில் நிவாரண நிதியாக தலா.ரூ.20லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். விமானம் மூலம் உடல்கள் மதுரை வருகை: இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவவீரர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 11மணிக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ராணுவீரர்கள் அணிவகுப்புடன் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்பட்ட ராணுவவீரர்களின் உடல்களுக்கு பழைய விமானநிலையம் முன்பாக மரியாதை செலுத்திடும் நிகழச்சி நடைபெற்றது.அப்போது தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்,மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,மாவட்ட எஸ்.பி.(பொ)சக்திவேல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து வணங்கிமரியாதை செலுத்தினார்கள்.இதையடுத்து ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு ராணுவத்தினர் புடைசூழ கொண்டு செல்லப்பட்டது. நிவாரணநிதி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்: இந்நிலையில் பள்ளக்காபட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவவீரர் சுந்தரபாண்டியின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் சுந்தரபாண்டியின் பெற்றோர் சின்னச்சாமி-தமிழச்செல்வி மற்றும் மனைவி சிவபிரியா ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரணநிதியாக ரூ.20லட்சத்திற்காக காசோலையை அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.பின்னர் கே.வெள்ளாகுளத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,கலெக்டர் கொ.வீரரகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்த அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் மரணமடைந்த தாமோதரகண்ணனின் பெற்றோர் மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதியாக ரூ.20லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.
21குண்டுகள் முழங்க இறுதிச்சடங்குகள்: இதனிடையே நேற்று காலை பள்ளக்காபட்டி சுடுகாட்டில் ராணுவவீரர் சுந்தரபாண்டியன் உடலுக்கு 21துப்பாக்கி குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சுந்ரபாண்டிக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் கே.வெள்ளாகுளம் சுடுகாட்டில் ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு 21குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி நிகழ்சிகளில் கலந்து கொண்டோர்: மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ்,வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,மாவட்ட கழக துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ரமேஷ்,திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர்முருகன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சாமிநாதன்,வேல்முருகன்,சிவன்காளை,பிரபுசங்கர்,கண்ணன்,தாத்தப்பன்,பாண்டியன்,அன்னக்கொடி,சுகுமார்,நிரஞ்சன்,சிவா,உசிலம்பட்டி ஆர்.டி.ஓ சுகன்யா, திருமங்கலம் தாசில்தார் மலர்விழி,துணை தாசில்தார் தனபாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள்,அரசுஅலுவலர்கள் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்3 days 6 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.