முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி இடைத் தேர்தல்: அமைச்சர்கள் ஓட்டு சேகரிப்பு

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

திருச்சி.அக்.7 - திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் திருச்சியில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். திருச்சி தென்னூர் 49வது வட்டத்தில் மேற்கு தொகுதி வேட்பாளர் பரஞ்சோதி, 49வது வட்ட அதிமுக வேட்பாளர் கிதிர் முகமது ஆகியோர்களை ஆதரித்து அமைச்சர்கள் கே.எ.செங்கோட்டையன், என்.ஆர்.சிவபதி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.மனோகர் ஆகியோர் அண்டகுண்டான், ஆழ்வார்த்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாக நடந்து சென்று ஓட்டுக்கேட்டனர். 

அதேபோல அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் 

தீரன் முகமது இக்பால், மாவட்ட சிறுபான்மை செயலாளர் ஏ.எம்.மீரான், அண்டகுண்டான் அப்பாக்குட்டி ஆகியோர் பாட்டுப்பாடி முஸ்லிம் சமுதாய மக்கள் வாழும் பகுதிகளில் மேற்கு வேட்பாளர் பரஞ்சோதி, 49வது வட்ட வேட்பாளர் கிதிர் முகமது ஆகியோர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டனர். 

இதேபோன்று மேற்கு வேட்பாளர் பரஞ்சோதி, 60வது வட்ட அதிமுக வேட்பாளர் என்ஜினியர் ராஜா ஆகியோர்களை ஆதரித்து உறையூர் கல்நாயக்கன்தெரு, அரவானூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் வீடுவீடாக சென்று ஓட்டுக்கேட்டார். 

அவருடன் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

48வது வட்ட அதிமுக வேட்பாளர் எம்.எம்.ஆர்.முஸ்தபாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பீமநகர் முருக்குகார தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓட்டுக்கேட்டனர். தொழுகை முடிந்து வந்தவர்களிடம் வேட்பாளர் முஸ்தபா ஓட்டுக்கேட்டார். 

மேலும் மேற்கு தொகுதி வேட்பாளர் பரஞ்சோதி 44வது வட்ட அதிமுக வேட்பாளர் ஹேமமாலினி மகேந்திரன் ஆகியோர்களை ஆதரித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா ஒத்தக்கடை, கண்டோன்மெண்ட், ஈத்கா மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடிசை வாழ் பகுதிகளுக்கு சென்று இரட்டைஇலைக்கு ஓட்டுக்கேட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்