எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பொது ஏலம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முனைவர் நடராஜன் எச்சரித்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர்;.ச.நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்ட நெல், சிறுதானியம் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் முழுவதுமாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு ஏதுவாக வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வருவாய் கிராமம் வாரியாக பயிர்மதிப்பீட்டு அளவு அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. விரைவில் பயிர் அறுவடை பரிசோதனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு பரிசோதனை முடிவுகள் அனைத்தும் அறிக்;கையாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.
தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட சாத்தியக்கூறு உள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவ்விடங்களுக்கு உகந்த மாற்றுத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட ஏதுவாக வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டு ரூ.13.17 கோடி மதிப்பில் 1,061 பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 610 பணிகள் மேற்கொள்ள ரூ.7.22 கோடி மதிப்பில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பணி ஆணை வழங்கப்பட்டுள்ள குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகளை உடனடியாக நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள கண்மாய்கள்-குளங்கள்-ஏரிகள் ஆகியவற்றில் விவசாயம் மற்றும் இதர பணிகளுக்கு தேவையான கிராவல், சவுடு மற்றும் மண் ஆகியவற்றை தூர்வாறும் நோக்கில் அரசு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் 60 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு மாவட்ட அரசு இதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் தூர்வாருதல்
இதுதவிர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், ஊரணிகள் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு உரிய கால அவகாசம் வழங்கியும், இதுநாள் வரையில் அகற்றாமல் உள்ள உரிமைதாரர்களுக்கு குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் 133-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வேருடன் அகற்றி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத நிலையினை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு பேசினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் 3 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான நீரைப் பயன்படுத்தி அதிக அளவிலான மகசூல் ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டு நீர்;ப்பாசனம் மற்றும் நுண்ணீர் பாசனம் ஆகிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் பயன்பெற சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருவதாகவும், தகுதியான விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.அலி அக்பர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடைபராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ்.தமிழ் வேந்தன் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.