முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையரசனேந்தல் கருப்பசாமி கோவிலில் அரிவாள்கள் மீது நடந்தபடியே அருள்வாக்கு சொல்லும் பூசாரி

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

கோவில்பட்டி

 

கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தலில் உள்ளது 18ம்படி கருப்பசாமி திருக்கோவில். இந்த திருக்கோவிலின் மஹாசிவராத்திரி மற்றும் கோவில் கொடை விழா கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோவில் பூசாரி அரிவாள்கள் மீது நடந்து கொண்டு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு 18ம்படி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில்பூசாரி 21 அரிவாள்கள் மீது நடத்து கொண்டே பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து பில்லி, சூனியம் போன்றவைகளில் இருந்து மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக பக்தர்கள் செய்த மிளாகாய் பொடி அபிஷேகத்தினை பூசாரி கருப்பசாமி ஏற்றுக்கொண்டார். இதையெடுத்து அவர் ஆணிகால் செருப்பில் நடந்தவாறு அருவாக்கு கூறினார். இந்த விழாவில் கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்கதலைவர் பழனிச்செல்வம், அதிமுக அம்மாபேரவை மகாலட்சுமி சந்திரசேகர், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் விழாவினை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஆர்.எஸ்.முருகன் மிக சிறப்பாக செய்திருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்