எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேலம் அகற்றும் பணிகள் குறித்து அனைத்து துறைகளை அதிகாரிகளின் ஆலோசணைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.நடராஜன்,தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 11.565 ஹெக்டர் பரப்பளவிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றப்பட்டுள்ளதாகவும், வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்திட முன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதார்.
செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும் தெரிவித்தது:
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 104947.03.5 ஹெக்டர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் தனியார் பட்டா நிலங்களில் 68657.97.5 ஹெக்டர் பரப்பளவிலும், அரசு நிலங்களில் மொத்தம் 36259.06.0 ஹெக்டர் பரப்பளவிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது.அதன் பேரில் இப்பகுதிகளில் இதுவரை மொத்தம் 11565.82.5 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக பரப்பளவிலான சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை கண்மாய்கள், ஊராட்சிகளுக்குட்பட்ட கண்மாய்கள் பொது ஏலத்தில் கொண்டுவர உரிய விளம்பரம் செய்யப்பட்டு ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.அதுபோல நேரு யுவகேந்திரா போன்ற தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பெருமளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மூலமாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு தங்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் உறுதி மொழி பெறப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர் அடங்கிய விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் அரசு கேபிள் மூலமாகவும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுப்பணித்துறை, நகராட்சி, ஊராட்சிகள், பேரூராட்சிகள், வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NH) உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இதுதவிர தனியார் பட்டா நிலங்களில் உள்ள கருவேல மரங்களை உடனடியாக அவரவர்களே அகற்ற வேண்டும் எனவும் அவ்வாறு அகற்ற தவறும் பட்சத்தில் அரசு செலவில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி அதற்குரிய செலவுத் தொகை இருமடங்காக பட்டா உரிமைதாரர்களிடம் வசூல் செய்து அரசு கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், அறிவிப்பு விளம்பரம் மற்றும் ஒவ்வொரு பட்டா உரிமைதாரர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு தனி நபர் பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை துரிதமாக அகற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர்விநியோகம் செய்திட ஏதுவாக மொத்தம் ரூ.1531.77 இலட்சம் மதிப்பீட்டில் 1,061 பணிகள் செயல்படுத்த சிறப்பு திட்டம் தயார் செய்யப்பட்டு அவற்றில் இதுவரை ரூ.1010.490 இலட்சம் மதிப்பீட்டில் 831
பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. புதிதாக உறைக் கிணறுகள் வெட்டவும், பழைய கிணறுகளை ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி குடிநீர்; விநியோக குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்திட வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் முள்ளிமுனை, சின்ன ஏர்வாடி குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்திட மத்திய உவரி ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உடனுக்குடன் சரிசெய்து வருகின்றனா;. இவ்விரு திட்டங்களும் இன்னும் இரு தினங்களில் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். காரங்காடு கிராமத்தில் 16 இலட்சம் மதிப்பில் கடல்நீரை குடிநீராக மாற்றம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் ஒரு வார காலத்திற்குள் துவங்கப்படவுள்ளது. இவை தவிர 15 பெரிய ஊராட்சிகளில் உவரி நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்த பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வறட்சி நிவாரண பணிகள், வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியாரின் (வேளாண்மை) பிரிவு நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்3 days 6 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.