எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அக்.18 - காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை இந்திய கெஜட்டில் வெளியிட நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பிக் வேண்டும் என பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி நதிநீர்ப் பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகம் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட நதிநீர் ஆணையம், தனது இறுதி உத்தரவை பிறப்பித்த பிறகும்கூட கர்நாடகம் அதற்கு அடிபணியவில்லை. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை ஒழுங்காக தருவதும் இல்லை.
இந்தநிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் ஒரு கடிதமும் எழுதினார். அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் 80 சதவீத நீர்ப்பாசனத்திற்கு காவிரி நதிநீர்தான் ஜீவநாடியாக இருந்துவருகிறது. காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால்தான் தமிழக மக்களுக்கு உணவு பாதுகாப்பே கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலம் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் விடத் தவறினால் தமிழகத்தின் விவசாயம் மட்டுமல்ல, பொருளாதாரமும் பாதிக்கப்படும். இரு மாநிலங்களிடையே இந்த பிரச்சனை 1960 ல் வெடித்தது. தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் கர்நாடக அரசு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. பிறகு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்திய அரசு 1990 ல் காவிரி நதிநீர் தாவா தொடர்பான தீர்ப்பாயத்தை அமைத்தது. இந்த காவிரி நதிநீர் ஆணையம் தனது இடைக்கால உத்தரவை 25.6.1991 ல் பிறப்பித்தது. அது 10.12.1991 ல் இந்திய அரசால் கெஜட்டில் வெளியிடப்பட்டது. பிறகு காவிரி நதிநீர் ஆணையமானது 5.2.2007 ல் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அப்போது கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு தரப்படவேண்டிய தண்ணீரை ஒதுக்கீடு செய்து நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இதை கர்நாடக அரசும், கேரள அரசும் ஏற்றுக்கொள்ளாமல் இறுதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றன. தமிழகமும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. பின்னர் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசும் தனது கருத்துக்களை எடுத்துவைத்தது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களது மனுக்களை தாக்கல் செய்தன. அவையெல்லாம் தற்போது நிலுவையில் உள்ளன. காவிரி நதிநீர் ஆணையத்தால் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், அந்த உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை. மேலும் கர்நாடக அரசு இந்த விஷயத்தில் தான் தெரிவித்துள்ள யோசனையை இறுதி உத்தரவுக்கான சம்மதம் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய அரசு நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை அரசு கெஜட்டில் வெளியிடுவதுதான் நல்லது. அப்போதுதான் இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அதற்கு கட்டுப்பட்டு இறுதி உத்தரவை அமுல்படுத்தும். இந்த விஷயம் தொடர்பாக கடந்த 14.6.2011 அன்று தங்களை நேரில் சந்தித்தபோது நான் மனு கொடுத்தேன். அப்போதே காவிரி நதிநீர் ஆணைய இறுதி உத்தரவை கெஜட்டில் வெளியிடுமாறு நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடும்படி நான் கேட்டுக்கொண்டேன். அதே வேண்டுகோளை இப்போதும் முன்வைக்கிறேன். காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை இந்திய கெஜட்டில் வெளியிடுமாறு நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு நீங்கள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்த கடிதத்தின் மூலம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு துரிதமாக நடவடிக்கை எடுத்தால் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
தொடர் விடுமுறை எதிரொலி: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
10 Apr 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
-
மாவோயிஸ்ட் நடமாட்டம்..? 3 மாநில எல்லையில் ரோந்து பணி தீவிரம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலின் அடுத்து ரோந்து பணி தீவிரமாக உள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: 2 நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 2,680 உயர்வு
10 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.
-
'நீட்' விலக்கு தொடர்பான வழக்கிலும் இது தொடரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
10 Apr 2025சென்னை, தி.மு.க. அரசு பெற்றுத்தரும் தீர்ப்புகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவை.
-
நிதி நிறுவன பெயர்களில் மோசடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
10 Apr 2025சென்னை, நிதி நிறுவனங்களில் மோசடி தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
-
யேமன் நாட்டு தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு
10 Apr 2025யேமன்: சனாவின் மக்கள் குடியிருப்பு நிரம்பிய அல்-நஹ்தாயின் பகுதியின் மீது அமெரிக்க நேற்றுமுன்தினம் நள்ளிரவு வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.
-
காகிதமில்லா சட்டசபையாக புதுச்சேரி அறிவிப்பு
10 Apr 2025புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதமில்லா சட்டப் பேரவையாக அறிவித்து துவக்கவிழாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரை அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது
-
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
10 Apr 2025மேட்டூர், டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை வரும் ஜூன் 12-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்ம
-
சென்னை பனையூரில் விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
10 Apr 2025சென்னை, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
-
அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை ஏன்? மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
10 Apr 2025சென்னை, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
-
வங்கக் கடலில் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழக்கும்: ஆய்வு மையம்
10 Apr 2025சென்னை, வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண
-
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
10 Apr 2025புதுச்சேரி: பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் 2வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை.
-
மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல்
10 Apr 2025டெல்லி: டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
-
போப் பிரான்சிசை சந்தித்து நலம் விசாரித்த இங்கி. மன்னர் சார்லஸ்
10 Apr 2025ரோம்: போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் திடீரென சந்தித்தனர்
-
ஐ.பி.எல். தொடரில் தொடரும் சாய் சுதர்சனின் பல சாதனைகள்
10 Apr 2025அகமதாபாத்: ஐ.பி.எல். தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங்கில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
தமிழக வீரர்...
-
கோடை கால மின் தேவை:கூடுதல் மின்சாரம் கொள்முதல்
10 Apr 2025மதுரை: கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மாணவியை வெளியே உட்கார வைத்த விவகாரம் கோவை தனியார் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்
10 Apr 2025கோவை, பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்
-
கோவை பள்ளி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
10 Apr 2025கோவை, மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என மின்துறை அமைச்சர் செ
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி: மாஞ்சோலையில் அதிகாரிகள் குழு ஆய்வு
10 Apr 2025நெல்லை, மாஞ்சோலையில் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
-
சச்சினுக்கு பிறகு அதிசய வீரர்:பிரியன்ஷ் ஆர்யாவுக்கு சித்து பாராட்டு
10 Apr 2025மும்பை: சச்சினுக்கு பிறகு, அவர் ஒரு அதிசய திறமை கொண்ட வீரர் என்று பிரியன்ஷ் ஆர்யா வுக்கு சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்கள் அல்ல: மும்பை உயர்நீதிமன்றம் கருத்து
10 Apr 2025மும்பை, மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் வகையில் மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்களாக கருத முடியாது என, மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்வு: அமித்ஷா இன்று ஆலோசனை
10 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
-
டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்து: பலி 113 ஆக உயர்வு
10 Apr 2025சாண்டோ டொமிங்கோ: டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட விபத்தில் மாகாண கவர்னர் மரணம் பலி எண்ணிக்கை 113 உயர்ந்துள்ளது.
-
பணிநீக்க விவகாரம்: மேற்குவங்காளத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
10 Apr 2025கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.