முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் கோர்ட்டில் இயக்குனர் அமீர் ஆஜர்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ராமநாதபுரம் கோhட்டில் இயக்குனர் அமீர் ஆஜரானார்.

     ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி  தமிழ்த்திரையுலகத்தின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை  ராமநாதபுரம் முதன்மை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் ராமநாதபுரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி வழக்கு விசாரணைக்கு இயக்குனர் அமீர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகாததால் வழக்கினை விசாரித்த நீதிபதி இயக்குனர் அமீருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை இயக்குனர் அமீர் ராமநாதபுரம் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) ராம் முன்னிலையில் நேரில் ஆஜரானார். அப்போது அவர் தன்மீதான பிடிவாரண்டை விலக்கி கொள்ளுமாறு வக்கீல் சோமசுந்தரம் மூலம் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராம் இயக்குனா அமீர் மீதான பிடிவாரண்டினை ரத்து செய்து வழக்க விசாரணைக்காக இயக்குனர் அமீர் வரும் ஜுன்  9-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்