முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திர தின நீர்மோர் பந்தல் திறப்பு

வியாழக்கிழமை, 4 மே 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணத்தில் அக்னி நட்சத்திர தினத்தை முன்னிட்டு டவுன் ஹால் நிர்வாகத்தினர் நீர்மோர் பந்தலை திறந்தனர். இது குறித்து விவரம் வருமாறு.

நீர்மோர் பந்தல்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் தி டவுன்ஹால் உள்ளது. இந்த டவுன்ஹால் நிர்வாக அங்கத்தினரும் பஞ்சாப் வங்கி அதிகாரியுமான ஏகாம்பரம் சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. இந்த நீர் பந்தல் திறப்பு நிகழ்விற்கு துணை தலைவர் தேவன்பு, உதவி செயலாளர் நைனா மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி டவுன்ஹால் பொது செயலாளர் டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நீர் மோர் வழங்கினார். அப்பொழுது கட்டிட பொறுப்பாள் ரமேஷ், சமூக பணி பொறுப்பாளர் ஆர்.வெங்ட்டரமணன், செயற் குழு உறுப்பினர்கள் பாஸ்கர், பாபு, காமேஷ், மற்றும் முன்னாள் கவுன்சிலர் பாபு, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். ஏராளமான பொது மக்கள் பங்கேற்று தங்கள் தாகங்களை தனித்து கொண்டனர்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்