முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட பகுதிகளில் வழிப்பறி,வாகன திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

 அலங்காநல்லூர்.-   தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ்குமார்யாதவ்,  காவல்துறை துணைத்தலைவர் பிரதீப்குமார், ஆகியோரது ஆலோசனையின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நடந்துவந்த தங்கநகைபறிப்பு,வழிப்பறி,இருசக்கரவாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை சமயநல்லூர் துணை சூப்பிரண்டு முருகேஷ் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ்,சப்இன்ஸ்பெக்டர்கள் சுரேஸ்,ஆனந்த்குமார்,மற்றும் போலீஸார்கள் கொண்ட குழுவினர் இது பற்றிய தீவிர தேடுதல் வேட்டையின் போது சமயநல்லூர் முத்துஇருள் (வயது 23)ஆண்டாள்புரம் பாலகுமார்(எ)பீடிபாலா,(23), ஒத்தகடை நக்கீரன்(எ)அர்ஜூன்(21)ஊர்மெச்சிகுளம் நாகசாமி(எ)கார்த்திக்,(21)ஆகிய நான்கு பேர்களையும் தனிபடை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
       இதில் வழிப்பறிக்கு பயன் படுத்திய நான்கு இருசக்கர வாகனங்கள்,வழிப்பறி செய்த தங்க நகைகள், உள்பட ரூ,10 லட்ச மதிப்புள்ள பொருள்களை கைப்பற்றினர்மேலு இவர்கள் மீது சிகங்கையில் வீடு புகுந்து திருடியது உள்பட 13 வழ்க்குகளில் சம்மந்தபட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும்  வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த வழக்குகள் சம்மந்தமாக மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.முன்னதாக தனிப்படை போலீஸ் குழுவினருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து