எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ், தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர். ஆகியோர் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ டெங்கு தடுப்பு பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டு பேசும்போது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் சுற்றி இருக்கின்ற ஏறத்தாழ 45,000 ஏக்கர் முதல் சாகுபடி பருவத்தில் பயன் அடைகின்ற வகையில் ஒரு நாளைக்கு 900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டு வந்து இருக்கிறோம். கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக மிகப்பெரிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் தட்டுபாடே இல்லாத அளவிற்கு மாநகராட்சியின் சார்பில் சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக நான்கு மண்டலங்களிலும் ஒரு நாளைக்கு ஒரு வார்டு வீதம் நான்கு வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டு அறவே டெங்கு கொசு புழு உற்பத்தி இல்லாத அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தீவிர துப்புரவுப்பணிக்காக 400 பணியாளர்களும் மேலும் கொசுஒழிப்பு பணிகளுக்காக 1100 பணியாளர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். புகை பரப்பும் வண்டி 8, 5 லிட்டர் புகை பரப்பும் இயந்திரங்கள் 33, 2 லிட்டர் கை புகை பரப்பும் இயந்திரங்கள் 52, கை தெளிப்பான் 28 என டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகை பரப்பும் இயந்திரத்திற்கு 1600 லிட்டர் கொசு மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது மேலும் இப்பணியில் 40 மருத்துவர்களும், 117 செவிலியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. 29 வகையான காய்ச்சல் இருக்கிறது என்றும் காய்ச்சல் வந்தவுடன் அது டெங்கு காய்ச்சல் என்று பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் டெங்கு காய்ச்சல் அறவே கட்டுப்படுத்தப்படும். எனவே அம்மாவின் அரசு தமிழக மக்களுக்கு சிறப்பான பணிகளை வழங்கி வருகிறது. டெங்கு தடுப்பு பணிக்கு செல்லும்பொழுது டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, அடுத்த 2 அல்லது 3 நாட்கள் கழித்து மறுபடியும் அதே ஆய்வு மேற்கொள்ளும் போது தவறு இருந்தால் அபராதம் விதிக்கலாம். அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல. ஒரு வீட்டினாலோ அல்லது நிறுவனத்தினாலோ சுற்றியுள்ளவர்களுக்கும், அடுத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அபராதம் விதிக்கப் படுகிறது. பொதுமக்கள் தங்கள் புகார்களை மக்கள் பிரதிநிதிகளிடம்தான் கூறுவார்கள் எனவே அலுவலர்கள் அதனை கவனத்தில் கொண்டு அரசிற்கு நல்ல பெயர் ஏற்படுத்த வேண்டும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் மழைகாலங்களில் பாதாள சாக்கடை மேனுவெல்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படும் அவற்றை உடனடியாக சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 5 வார்டுகளுக்கு ஒரு சம்பு அமைத்தோ மோட்டார்களின் எண்ணிக்கையை அதிகரித்தோ கழிவுநீரினை அகற்ற வேண்டும். கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள் போடுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவுநீரினை அகற்றுவதற்காக நவீன கழிவுநீர் உறிஞ்சு வாகனம் வாங்குவதற்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மண்டலத்திற்கு ஒன்று வீதம் விரைவில் கொள்முதல் செய்து மதுரை மாநகராட்சிக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்கள் நமது செயல்பாட்டையும் பணிகளையும் பார்த்து பாராட்டுகிறார்கள். எனவே மக்கள் பணியை நாம் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ், பேசும்போது தெரிவித்ததாவது :
மதுரை மாநகராட்சியில் வறட்சிக்காலத்தில் மிகப்பெரிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது சிறப்பாக திட்டமிட்டு வெற்றிகரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3,40,000 வீடுகளை 300 வீடுகளாக பகுதி பகுதியாக பிரித்து 300 முதல் 350 வீடுகளுக்கு ஒரு டிபிசி பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 50 வீடுகள் வீதம் ஆய்வு மேற்கொண்டு 6 நாட்கள் கழித்து 7 வது நாள் மறுபடியும் அதே 50 வீடுகளில் ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த நடைமுறை வருடம் முழுவதும் மேற்கொள்வதால் வீடுகளில் தேவையில்லாமல் தேக்கி வைத்துள்ள தண்ணீர் அகற்றப்படுவதுடன் தேவையற்ற பொருட்களும், கொசு புழு உற்பத்தியாகும் காரணிகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட போது டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. இப்பணியில் களப்பணியாளர்களும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு நாளைக்கு ஒரு வார்டு வீதம் 4 வார்டுகள் தேர்வு செய்;யப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கும் 50 முதல் 60 பணியாளர்களை கொண்டு அனைத்து வீடுகள், காலியிடங்கள் என தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் அனைத்து வார்டுகளும் என சுழற்சி முறையில் தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள 744 பள்ளிகளுக்கும் 2 தவணையாக வருடத்திற்கு 6 முறை நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பிலும், பொது சுகாதாரத்துறையின் சார்பிலும் டெங்கு தடுப்பு சிறப்பு முகாம்கள்; தொடர்ந்து நடத்தப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து பணிமனைகள், பெரிய கட்டிடங்கள் என வார்டு வாரியாக கணக்கெடுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் தேங்குவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது. இந்த டெங்கு தடுப்பு பணி தொடர்ந்து மேற்கொள்வதால் டெங்கு கொசு புழு உற்பத்தி உருவாகுவது தடுக்கப்படும். 300 வீடுகளை பணியாளர்கள் முறையாக பார்க்கிறார்களா என கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முறையாக பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு பணியை பொறுத்தமட்டில் டெங்கு அனைத்து காலங்களிலும் வருவதால் அதிக பொருட் செலவு ஆனாலும் மக்களுடைய பாதுகாப்பு நலன் கருதி இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் இதே முறை பின்பற்றப்படும். இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகும் புழு உற்பத்தி கண்டறியப்பட்டால்தான் அபராதம் விதிக்கப்படுகிறது. மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் கேஸ் குளோரின், லிக்யூட் குளோரின் மூலம் குடிநீரில் சரியான அளவு குளோரின் கலக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரில் குளோரின் அளவு சரியாக கலக்கப்பட்டு இருந்தால் டெங்கு கொசு புழு உற்பத்தி குறைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் இதே முறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக நகராட்சி நிர்வாக ஆணையாளர் அவர்கள் மண்டலம் எண்.2 வார்டு எண்.44 கே.கே. நகர், மண்டலம் எண்.1 வார்டு எண்.23 விளாங்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த டெங்கு தடுப்பு பணிகளிலும், தீவிர துப்புரவு பணியினையும் ஆய்வு மேற்கொண்டார். விளாங்குடி கணபதி நகர் 1 வது தெருவில் காலியிடத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் ஆயில்பால் தெளிக்குமாறு உத்தரவிட்டார். அங்கு பணியாற்றிய டிபிசி பணியாளர்களிடம் டெங்கு பணி குறித்த விபர அறிக்கையினை பார்வையிட்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர், சென்னை ஜி.பிரகாஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, சரவணன், துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், நகரப்பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல நிர்வாக ஆணையர்கள், 5 மாவட்ட நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.