எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,-: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பு மென்பொருள் செயலியை (மொபைல் ஆப்) அமைச்சா் மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார். இந்நிகழச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.கூட்ட நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் நலனுக்காக மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் முன்னிலையில் சிறப்பு மென்பொருள் செயலியை (மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு , நவீன செயற்கை கால், சூரிய மின்கலத்துடன் கூடிய காதொலிக்கருவிகள், விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் விலையில்லா சலவை பெட்டிகள் என 12 பயனாளிகளுக்கு நலத்திட்டப் பொருள்களை அமைச்சரும்,மாவட்ட ஆட்சியரும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்.முத்துமாரி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் தங்கவேல், தேசிய தகவல் மைய அலுவலா் ராஜசேகா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அண்ணாதுரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோ் நல அலுவலா் முருகானந்தம், உதவி ஆட்சியா் (பயிற்சி) மணிராஜ் உள்பட மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனா்.
அரசு நலத்திட்டங்களை பயனாளிகளுத்து சேர்ப்பதில் நம் மாவட்டம் முன்னோடியாக செயல்படுகிறது: நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குதல், செயற்கை கால், முடநீக்கி கருவி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதில் நமது மாவட்டம் பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை போக்கிடும் வகையில் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் செயலி மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை விண்ணப்பிக்கவும், அரசு நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய செயலியினை இராமநாதபுரம் மாவட்ட இணையதளமான( www.ramnad.tn.nic.in) என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில், பயனாளிகள் தங்களது கைபேசி எண்ணை செலுத்தினால், அந்த கைபேசி எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் ((One Time Password ) கிடைக்கப்பெறும். அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி இச்செயலியில் உள்ள வசதிகளை எளிதில் உபயோகித்து பயனடையலாம். இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இதுவரை மொத்தம் 27,591 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு இந்த அடையாள அட்டை மிகவும் அவசியமாகும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மென்பொருள் செயலியின் மூலம் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே தங்களது கைபேசியின் வாயிலாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக இணையதளம் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, விண்ணப்பங்களின் நிலை குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர இச்செயலியினை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயன்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இத்தகைய புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ள மாவட்ட நிh;வாகத்திற்கும், இதற்காக பணியாற்றிய அலுவலா;களுக்கும் பாராட்டுக்களை தொpவித்துக் கொள்கிறேன் என அமைச்சா் மணிகண்டன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.