எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 5 வார்டில் வசிப்பவர் ராமச்சந்திரன் (69). இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகரத்தினம் (71) ஆசிரியர் தொடக்க கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு வெங்கடேசன் நரசிம்ம பாண்டியன் (42) மகனும் ஜெயஸ்ரீ பத்துமா (35) என்ற மகளும் உள்ளனர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி நாகரத்தினம் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்மீக ரத யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (65) அவரது மனைவி மெய்யம்மை (62), சிவக்குமார் (52) மனைவி நீலோத் பாலாம்மாள் (45) ஆகியோர்களுடன் இணைந்து இமய மலையில் உள்ள கைலாஷ் சுவாமியை தரிசனம் செய்ய ஆன்மீக பயணத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் ராமச்சந்திரன் நேபாளம் எல்லை அருகே உள்ள பகுதியில் யாத்திரீகளுடன் செல்லும் போது கடந்த 2ம் தேதி ராமச்சந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடன் சென்றவர்கள் முதலுதவி அளித்தும் பயனின்றி இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து தூதரகத்தின் மூலமாக உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆண்டிபட்டியில் உள்ள அவரது மருமகள் சரணியா என்பவர் எனது மாமனாரின் உடலை மீட்டுத்தருமாறு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதனடிப்படையில் மத்திய - மாநில அரசுகளின் உதவியுடன் இறந்த ராமச்சந்திரனின் உடல் கடந்த 3ம் தேதி காத்து மண்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து விமான மூலமாக டெல்லி கொண்டு வரப்பட்டு, சென்னைக்கு விமானம் மூலமாக உடலை அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடலை சென்னையிலிருந்து அமரர் ஊர்தி மூலமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வந்தனர். அவரது உடலை கண்டு உறவினர்களும், பொதுமக்களும் கதறி அழுதனர்.
இதனையடுத்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்தீபன், அ.ம.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் ஆகியோர் ராமச்சந்திரன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதனையடுத்து ஆண்டிபட்டியில் உள்ள மயானத்தில் ராமச்சந்திரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து இறந்த ராமச்சந்திரனின் மகன் வெங்கடேசன் கூறியதாவது. எனது பெற்றோர் கைலாஷ் மானசரோவர் பனி லிங்கத்தை தரிசிக்க யாத்திரையாக சென்றனர். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக எனது தந்தை திபெத்தை அடுத்த தார்ஜன்ட்டில் உயிரிழந்தார்.இதனையடுத்து சீன தூதரகம் மூலம் பெங்களுரில் உள்ள எனது சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. அவர் மூலமாக எனக்கு தகவல் கிடைத்தது. உடன் நான் பெங்களூரு சென்று குடும்பத்துடன் கல்கத்தா சென்று, அங்கிருந்து நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு சென்றோம். சீன அரசின் தூதரகம் மூலம் திபெத்தில் எனது தந்தையின் உடலில் இருந்த நீரை வெளியேற்றி, பதப்படுத்தி காத்மாண்டுக்கு அனுப்பினர். அங்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய தூதரகம் மூலம் டெல்லிக்கு விமானம் மூலம் உடல் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சென்னை வந்து , தற்போது சொந்த ஊரான ஆண்டிட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மிகவும் சோகமயமான சூழலில் எனது தந்தையின் உடலுடன் வந்தது நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டது. இந்த நிலை வேறு யாருக்கும் ஏற்பட கூடாது. இருப்பினும் விரைந்து செயல்பட்டு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.