எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பங்களுமே வளர்ச்சிக்கான பாதை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 56-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களிடையே பேசியதாவது:
21-ஆம் நூற்றாண்டுக்கான குறியீடாக புதிய கண்டுபிடிப்புகள் உள்ளன. ஆராய்ச்சி செய்யும் சூழல்களை மேம்படுத்தும் விதமாக, உயர்கல்வி அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு உந்துதல் அளிக்கப்படுகிறது.
ஐ.ஐ.டி. நிறுவனங்களுக்காகவும், அவற்றின் கண்டுபிடிப்புகளுக்காகவும் தேசம் பெருமை கொள்கிறது. ஐ.ஐ.டி. நிறுவனங்களின் வெற்றி காரணமாகவே, நாடு முழுவதுமாக பொறியியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன.
அவை ஐ.ஐ.டி.க்களை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளதால், உலகில் அதிக தொழில்நுட்ப மனித ஆற்றல் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது.
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் உலக அளவில் இந்தியாவுக்கான அடையாளத்தை தந்துள்ளன. அதிகளவிலான ஐ.ஐ.டி. மாணவர்கள் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தை கட்டமைத்துள்ளனர்.
நாட்டில் ஆண்டுதோறும் 7 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தேர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு தரமான கல்வியும், போதிய திறன்களும் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டு முயற்சி தேவையாக இருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொழில்நுட்பத்தின் மூலமாக தேசத்தை கட்டமைப்பதற்காகவே ஐ.ஐ.டி.க்கள் உருவாக்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியர்கள் கடின உழைப்பாளர்கள், புத்திசாலிகள் என்று கருதப்பட்டனர். தற்போது தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஓர் இலக்காக இந்தியா உருவெடுத்துள்ளது. ஐ.ஐ.டி. மாணவர்கள் பலர் இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முன்னணி பிரதிநிதிகளாக உள்ளனர்.
அத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சில, பல்வேறு தேசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னணியிலும் உள்ளன. அடுத்த 20 ஆண்டுகளில் புத்தாக்கமும், புதிய தொழில்நுட்பமுமே உலகில் வளர்ச்சிக்கான பாதையை தீர்மானிப்பவையாக இருக்கும்.
5ஜி அகண்ட வரிசை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை, பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் குறிக்கோளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஐ.ஐ.டி.க்கள், தொழில்நுட்பத்தை கற்பதற்கான ஓர் கல்வி நிறுவனங்களாக மட்டுமல்லாமல், இந்தியாவின் உருமாற்றத்துக்கான ஓர் கருவியாகவும் இருக்கின்றன. தொழில்நுட்ப புரட்சிக்கான முக்கிய ஆதாரம், ஐ.ஐ.டி.க்களாகும்.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நிறுவனங்களே, இந்தியாவை ஓர் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான அடித்தளமாக இருக்கப்போகின்றன.
அடல் புத்தாக்க திட்டம் மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலமாக, தொழில்முனைவோருக்கான சூழலியலைக் கொண்ட உலகின் 2-ஆவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மையமாக இந்தியா மேம்பட்டு வருகிறது.
புத்தாக்க குறியீட்டுத் தரவரிசையில் இந்தியா முன்னேறி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் இல்லாத சமூகம் தேக்கமடைந்துவிடும். புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான இலக்காக இந்தியாவை உருவாக்க வேண்டும்.
அதற்கான புதிய யோசனைகள் யாவும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி வளாகங்களில் தோன்றுகிறதே தவிர, அரசு அலுவலகங்களில் அல்ல. என்று பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
01 May 2024புதுடெல்லி : போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க