எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன், பிப்.- 6 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எளிதில் வென்றது. ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஒரு நாள் உலகச் சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொண்டுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மழையின் காரணமாக இந்த போட்டி 32 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸி. அணி புதுமுகங்களும் அனுபவ வீரர்களும் கொண்ட கலவையாக களமிறங்கியது. அந்த அணியில் மாத்யூ வாடே மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் ஒரு நாள் போட்டியில் முதன்முதலாக களமிறங்கினர். இவர்களில் வாடே மற்றும் வார்னர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கத்தில் இந்திய பந்துவீச்சு நன்றாக இருந்தது. குறிப்பாக வினய்குமார் சிறப்பாக பந்துவீசினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆஸி. அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது 6 ரன்களை எடுத்திருந்த வார்னர், வினய்குமார் பந்தில் கிளீன்போல்டானார். இதையடுத்து களமிறங்கிய ரிக்கி பாண்டிங்கும் 2 ரன்கள் எடுத்த நிலையில் வினய்குமாரின் பந்தில் ரெய்னாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது ஆஸ்திரேலிய அணி 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் பங்கிற்கு 10 ரன்களை எடுத்து ரோகித் சர்மாவின் பந்தில் ராகுல்சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால்14.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு ஆஸி. அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து துவக்க ஆட்டக்காரர் வாடேயுடன் மைக் ஹஸ்ஸி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் வாடே ஒருநாள் போட்டியில் தனது கன்னி அரை சதத்தை நிறைவுசெய்தார். 23-வது ஓவரில் ஆஸி அணி 122 ரன்களை எடுத்திருந்தபோது ரோகித்சர்மாவின் பந்தில் வாடே 67 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன்போல்டானார். இவரை அடுத்து டேவிட் ஹஸ்ஸி களமிறங்கினார். இரண்டு ஹஸ்ஸிக்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆஸி.யின் ரன் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் 32 பந்துகளில் 45 ரன்களை எடுத்திருந்த மைக் ஹஸ்ஸி, வினய்குமாரின் பந்தில் விராட் ஹோலியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து டேவிட் ஹஸ்ஸியுடன் கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது. 32 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது. டேவிட் ஹஸ்ஸி ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 61 ரன்களையும் கிறிஸ்டியன் 17 ரன்களையும் எடுத்திருந்தனர். வினய்குமார் 3 விக்கெட்டுகளையும், ரோகித்சர்மா, ராகுல் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 217 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரும் கவுதம் காம்பீரும் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டெண்டுல்கர், ஸ்டார்க்கின் பந்தில் ரிக்கி பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 2 மட்டுமே. அடுத்ததாக காம்பீரும் 5 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் விக்கெட் கீப்பர் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக விராட் ஹோலியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 64 க்கு உயர்ந்தபோது 31 ரன்களை எடுத்திருந்த விராட் ஹோலி, மெக்கேயின் பந்தில் கிளீன்போல்டானார். அடுத்து ரெய்னா களமிறங்கினார். மேலும் ஒரு ரன் சேர்ந்த நிலையில் ரோகித் சர்மாவும் மெக்கேயின் பந்தில் கீப்பர் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து அணியின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்தபோது 4 ரன்களை எடுத்திருந்த சுரேஷ் ரெய்னா, கிறிஸ்டியன் பந்தில் டேவிட் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து தோனியுடன் ஜோடி சேர்ந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடியும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 25 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த ஜடேஜா, மெக்கேயின் பந்துவீச்சில் டேவிட் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 22.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய அஸ்வின் தமது பங்கிற்கு 5 ரன்களை மட்டும் சேர்த்து ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 120 ரன்களில் 7 வது விக்கெட்டையும் இழந்தது. அடுத்து ராகுல் சர்மா 1 ரன் மட்டும் எடுத்து தோர்த்தியின் பந்தில் போல்டானார். இதனால் 123 வது ரன்னில் 8 வது விக்கெட்டும் பறிபோனது. அடுத்த சிறிது நேரத்தில் 29 ரன்களை எடுத்திருந்த தோனியும் தோர்த்தியால் அவுட்டாக்கப்பட்டார். அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து குமாருடன், வினய்குமார் ஜோடி சேர்ந்தார். இவர்கள் அணியின் ஸ்கோரை 150 க்கு உயர்த்தினர். இந்நிலையில் 15 ரன்களை எடுத்திருந்த குமார், மெக்கேயின் பந்தில் ஹாரிஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் இந்திய அணி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. வினய்குமார் ஆட்டமிழக்காமல் 12 ரன்களை எடுத்திருந்தார். இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் மெக்கே 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் தோஹர்த்தி 2 விக்கெட்டுகளையும் கிறிஸ்டியன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் முறையாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய மேத்யூ வாடே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.