எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஆக.18 - நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, ஆர்யா, டெல்லி கணேஷ், நாசர், பொன்வண்ணன், வையாபுரி, சின்னிஜெயந்த், மனோபாலா, சார்லி, ரவிக்குமார், ஸ்ரீகாந்த், கராத்தே தியாகராஜன், நடிகைகள் சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, சகுந்தலா உள்பட பலர் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நடிகர்–நடிகைகள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினர் ஆகவேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. ஆனால் சில நடிகைகள் உறுப்பினர் ஆகாமலேயே படங்களில் நடித்து வருகிறார்கள். இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அடுத்த வருடம் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழுவில் வரவு–செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நடிகர் சங்க பொதுக்குழுவையொட்டி காமராஜர் அரங்கை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரங்கத்திலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நடிகர் சங்க பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது.
அடையாள அட்டை காண்பித்து கையெழுத்து போட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நாடக நடிகர்களும் இதில் அடங்குவர். உறுப்பினர் அல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
பொதுக்குழுவில் சரக்குமார் பேசும்போது, ‘‘நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 3 மாதத்துக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையில் நடிகர் சங்கம் ஈடுபடும்’’ என்றார்.
நடிகர் விஷால் பேசும்போது, ‘‘நடிகர் சங்கத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததுதான் குறையாக இருக்கிறது. அடுத்த வருடம் சொந்த கட்டிடத்தில் பொதுக்குழுவை நடத்த வேண்டும். நடிகர் சங்க தலைமைக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நான் போட்டியிடப்போவதாக வெளிவந்துள்ள செய்தி உண்மை அல்ல.
கேரளாவில் நடிகர் சங்கத்துக்காக நடிகர்கள் இணைந்து படத்தில் நடித்தனர். அதுபோல் நமது நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட நானும், ஆர்யா, கார்த்தி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
நாடக மேடையில் இருந்து திரையுலகுக்கு வந்து சாதனைகள் படைத்த டி.எஸ்.பாலையாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நூற்றாண்டு விழா நடத்தப்படும். மூத்த கலைஞரும் லட்சிய நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நீண்டகால கலை சேவையை பாராட்டி பாராட்டு விழா நடத்தப்படும்.
ரூ.10 கோடி அளித்து சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் ரூ.15 கோடி செலவில் 2 குளிர்சாதன படப்பிடிப்பு தளம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்– அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறது. மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்ற கமலுக்கு பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக அதிருப்தியாளர்களான பூச்சி முருகன், காஜா மொய்தீன், சுந்தரம் ஆகியோர் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தனர்.
அவர்களை சிலர் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டவிடாமல் தடுப்பது நியாயமா? என்று கண்டித்து கோஷமிட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு 3 பேரையும் உள்ளே அழைத்து சென்றனர். அங்கும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை கண்டித்து கோஷம் போட்டனர்.
இதையடுத்து அவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் வெளியே வந்து விட்டனர். இதுகுறித்து பூச்சி முருகன் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பிரச்சினையில் தவறுகள் நடந்துள்ளதால் கோர்ட்டுக்கு சென்று தடை வாங்கினேன். என்னை நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். அதற்கும் கோர்ட்டில் தடை பெற்றுள்ளேன்.
இன்றைய பொதுக்குழுவில் பங்கேற்க எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி போலீஸ் பாதுகாப்போடு பொதுக்குழுவுக்கு வந்தேன். வருகை பதிவேட்டில் கையெழுத்திட என்னை அனுமதிக்கவில்லை. என்னை தரக்குறைவான வார்த்தைகளால் சிலர் திட்டினார்கள். எனவே பொதுக்குழுவில் பங்கேற்க முடியாமல் வெளியே வந்து விட்டேன்’’ என்றார்.
3 பேரையும் எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுந்ததால் பொதுக்குழுவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ