முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
Air

Source: provided

கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலை அடுத்து கண்காணிப்பு தீவிரபடுத்தியுள்ளனர். 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சென்னையிலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

நேற்று காலை கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அந்த இமெயிலில்  விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிட்டு அனுப்பியிருந்தார்.

இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தப்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை ஊட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பிற்பகலில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டது. விமான பயணிகள், உடைமைகள், விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.

உள்நாடு மற்றும் சர்வதேச முணயங்களில் இருந்து விமானங்களில் பயணிக்க வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கூடுதல் சோதனைகள் காரணமாக உள்நாட்டு விமான பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டனர். சர்வதேச விமான பயணிகள் 3 மணி நேரம் முன்னதாக விமான நிலையத்திற்கு வரும்படி 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து