எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப். 3 – முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளின் உபயோகத்திற்காக 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரத்தில் விநியோகிக்க குடிநீர் வாரியம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் மதிப்பு 255 கோடி ரூபாய் ஆகும். 2 வருட காலத்தில் இந்த பணி முடிவடையும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வீட்டு உபயோகத்திற்கு வழங்க இயலும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–
சென்னை மாநகரம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நல்ல போக்குவரத்து தொடர்பு உள்ளதால், தொழிற்சாலைகளின் முக்கியத்தும் வாய்ந்த நகரமாக விளங்குகிறது. தரை வழி, கடல் வழி, ரெயில் வழி ஆகிய தடங்கள், வடசென்னையில் உள்ளதால், வடசென்னை தொழிற்சாலை நகரமாக உருவாக உள்ளது.
மணலி – எண்ணூர், மணலி – மீஞ்சூர் வழித்தடங்களில் அதிக தண்ணீர் சார்புள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலைகள், இயற்கை எரிவாயு தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. தமிழ்நாடு தொழிற் மேம்பாட்டுக்கழகம் இந்தோராமா சிந்தசிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புது எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலை தொடங்க உள்ளது.
தற்போது மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அறிவித்தபடி தொழிற்சாலைகள் தொடங்க உள்ள தடையை நீக்கி உள்ளதால், அதிகமான தொழிற்சாலைகள் மற்றும் தற்போதுள்ள தொழிற்சாலைகளின் விரிவாக்கங்கள் நடைபெற உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இந்த துறைமுகத்தில் இயற்கை எரி வாயு முனையம் அமைக்க இருப்பதால் இங்கே தொழிற்சாலைகள் அதிகம் வர வாய்ப்பும் உள்ளது.
எல்.என்.டி நிறுவனம் தமிழ்நாடு தொழிற் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து காட்டுப்பள்ளியில் மிக பெரிய கப்பல்தளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது துவங்கப்பட்டால் கொழும்பு, சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய வெளிநாட்டு வழிதடமாக காட்டுப்பள்ளி துறைமுகம் விளங்கும்.
அபேன் நிறுவனம் காட்டுப்பள்ளி அருகே 1200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒரு 660 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு 660 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மற்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம், வல்லூரில் மூன்று 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. மேற்கூறிய காரணங்களால் வடசென்னையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு குடிநீர் மற்றும் பிற உபயோகத்திற்கான தண்ணீர் தேவை அதிகரிக்கப்படவுள்ளது.
68 தொழிற்சாலைகள்
வடசென்னையில் தற்போதுள்ள தொழிற்சாலைகள் வருமாறு:–
1. முறைபடுத்தும் தொழிற்சாலைகள்–15
2. மின் உற்பத்தி நிலையங்கள்–6
3. கப்பல் கட்டுதல் தொழில் நிறுவனங்கள்–4
4. பிற பயன்பாடுகளுக்கு உள்ள தொழிற்சாலைகள்– 43
மொத்தம்– 68 தொழிற்சாலைகள் உள்ளன.
68 தொழிற்சாலைகள் தவிர தொழில் தொடங்க உள்ள தடையை நீக்கியதால் மேலும் அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த தொழிற்சாலைகளுக்கான தனியாக நீர் ஆதாரங்கள் ஏதுமில்லை. சென்னைக் குடிநீர் வாரியம் தற்பொழுது மழைநீர் மற்றும் நிலத்தடிநீரை சுத்தம் செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறது.
தற்போதுள்ள மற்றும் புதியதாக தொடங்க உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்னைக் குடிநீர் வாரியம் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரமுள்ள நீரை வழங்க திட்டமிட்டுள்ளது.
இட்காட் நிறுவனம் வடசென்னையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் அளவினை ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.
எனவே வடசென்னையை ஒட்டியுள்ள மணலி மற்றும் மீஞ்சூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 2030-ம் ஆண்டிற்கான தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் என கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் உபயோகித்தபின், வெளியேற்றப்படும் நீரை மீண்டும் சுத்திகரிப்பட்டு உபயோகிக்க திட்டமிடப்பட்டது. சிங்கப்பூர் பொது பயன்பாட்டு நிறுவனம் கழிவுநீரை சுத்திகரித்து ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் கொள் படுகைகளுக்கு அனுப்பியது. நியூ வாட்டர் என்பது உபயோகப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட நீரை, சவ்வூடுபரவுதல் மூலம் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு கிருமிகள் நீக்குவதற்கு குளோரின் மூலம் சுத்திகரித்து வழங்கப்படும் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீராகும்.
நியூ வாட்டர் முதன்மையாக தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் மின்னணு தொழிற்சாலைகள், மின்உற்பத்தி நிலையங்கள், வணிக நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், குளிர்சாதன பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா கழிவுநீரை மறு சுழற்சி செய்து பிற உபயோகத்திற்காக பயன்படுத்துவதில் தீவிர முயற்சி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் 2014-–15 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் விதி எண் 110 ன் கீழ் வடசென்னையிலுள்ள தொழிற்சாலைகளின் உபயோகத்திற்காக மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் உலக வங்கி நிதியுதவியுடன் கொடுங்கையூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார்.
கொடுங்கையூரில் தற்போது நாளொன்றுக்கு 80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டும், 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளன. புதிதாக நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை எதிற்மறை சவ்வூடுபரவுதல் முறையில் சுத்திகரிப்பு நிலையம் முதலமைச்சரின் அறிவிப்பின்படி, கொடுங்கையூரில் சென்னைக் குடிநீர் வாரிய இடத்திலேயே அமைக்கப்படவுள்ளது.
தற்போது ஏற்கனவே கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 36 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2-ம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மணலி, மீஞ்சூர், மாதவரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்குவதன் மூலம் வருடந்தோறும் ரூபாய் 15 கோடி வருமானம் சென்னைக் குடிநீர் வாரியத்தால் ஈட்டப்பட்டுவருகிறது.
தற்போது முதல்வரால் அறிவிக்கப்பட்ட 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 34 தொழிற் நிறுவனங்களுக்கு குடிநீர் தரத்திலான தண்ணீர் வழங்குவதால் ஆண்டிற்கு சுமார் 74 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளது.
முன் சுத்திகரிப்பு முறை என்பது மறு சுழற்சி சுத்திகரிப்பு முறையின் முதல் நிலை ஆகும் . இந்த முறையில் மிதக்கும் கசடுகள், அசுத்தங்கள் மற்றும் எதிர்மறை சவூட்டுக்கு தீமை விளைவிக்கும் பொருட்கள் அகற்றப்படும் அல்லது குறைக்கப்படும். முன் சுத்திகரிப்பு முறையின் கட்டங்கள் பின் வருமாறு,
* குளோரின் டைஆக்ஸைடு செலுத்துவதன் மூலம் உயிரிகளுக்கு ஆக்சிஜன் ஊட்டல்
* விரைவு மணல் படுகை வடிகட்டியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் நுண்ணிய வடிகட்டி படுகைக்கு அனுப்பப்படும்.
நுண்ணிய வடிகட்டியின் மூலம் வடிகட்டுதல் முறையின் மூலம் முன் சுத்திரிப்பு முறையின் போது வடிகட்டபடாத மிக நுண்ணிய அசுத்தங்கள் அகற்றப்படும். இதன் மூலம் அடுத்த கட்டத்திலுள்ள எதிர்மறை சவ்வூடு பரவல் சவ்வூடுகள் பாதுகாக்கப்படும்,
எதிர்மறை சவ்வூடு பரவல் முறை அணுத்துகள்கள் அகற்றும் பணி நடைபெறும். இம்முறையில் ஒரு பாதையில் தூய நீரும் எதிர் பாதையில் அதிக உப்பு தன்மையுள்ளநீரும் வெளிப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் நீர் கரியமில வாயு நீக்கி அமைப்பு வழியாக செலுத்தப்பட்டு நீரின் கார அமில தன்மைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட நீரானது கீழ்நிலை தொட்டிகளில் சேமிக்கப்பட்டு மின்சார பம்புகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
துரித மணல் வடிகட்டி , நுண்ணிய வடிகட்டி, எதிர்மறை சவ்வூடுபரவுதல் மூலமாக வெளியேற்றப்படும் கழிவு இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீருடன் கலந்து நீர் வழித்தடங்களில் வெளியேற்றப்பட உள்ளது.
நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை எதிற்மறை சவ்வூடு பரவுதல் முறையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மற்றும் பகிர்மான குழாய்கள் பதிப்பதற்கு இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.255 கோடிகள் ஆகும்.
மிக அதிக தரமான தண்ணீர் தங்கு தடையின்றி தொழிற்சாலைகளுக்கு கிடைக்க இயலும். ஏரிகளில் சேமிக்கப்படும் மழைநீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுவது தவிர்க்கப்படும். இந்த நீரை சேமிப்பதன் மூலம் 45 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மக்களின் தேவைகளுக்கு உபயோகப்படுத்த இயலும்.
கழிவுநீர் சுத்திகரிக்க செலவிடப்படும் தொகையினை தொழிற்சாலைகளுக்கு கழிவுநீர் சுத்திகரித்து அனுப்புவதால் கிடைக்கும் வருவாய் மூலம் பெற இயலும். தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த ஏதுவாகிறது.
சென்னைக் குடிநீர் வாரியம் மறு சுழற்சி மூலம் உபயோகப்படுத்தப்பட்ட நீரினை மீண்டும் சுத்திகரித்து கட்டுமான பணிகளுக்கு தேவையான தரமான நீரை வழங்கவும் வீடுகள், பணியிடங்களில் உள்ள பூங்காக்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான நீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஒப்பந்தப்புள்ளியில் கோரப்பட்டு, விரைவில் வெளியிடப்பட்டு, பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு வருட காலத்திற்குள் இப்பணி நிறைவுபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.