எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ 1 - திமுக தலைவர் கருணாநிதி பெயரில் கடந்த 2007ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கலைஞர் டி.வி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த தொலைக்காட்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதம், மகள் கனிமொழி எம்.பி.க்கு 20 சதவீதம், இயக்குனராக இருந்த சரத்குமாருக்கு 20 சதவீதம் பங்குகள் இருந்தன.
இந்த நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை நடந்த போது கலைஞர் டிவிக்கும் அந்த பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் பெறுவதற்காக ஸ்வான் டெலிகாம் என்ற தொலை தொடர்பு நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி வரை நிதி வழங்கியுள்ளது என்று சிபிஐ கூறியது. 9 நிறுவனங்கள் மூலம் இந்த பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டை கலைஞர் டி.வி. மறுத்தது. தொலைக்காட்சி மேம்பாட்டுக்காக ரூ. 200 கோடி கடன் பெறப்பட்டதாகவும், அந்த கடன் தொகை வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டு விட்டதாக கலைஞர் டி.வி. விளக்கம் அளித்தது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தது. ஆனால் சிபிஐ விசாரணையில் பணப்பரிமாற்றம் சட்ட விரோதமாக நடந்து இருப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய அமலாக்க பிரிவு இது தொடர்பான விசாரணையை நடத்தியது. இந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அமலாக்க பிரிவினரும் உறுதிப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அமலாக்க பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். தயாளு அம்மாள் எழுத்துப்பூர்வமாக தன் பதிலை கொடுத்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொடுத்த பதில் மற்றும் விசாரணை தகவல்களை தொகுத்து கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி டெல்லி சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி, தயாளு அம்மாள், அமிர்தம், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, சரத்குமார் உட்பட 10 பேர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
இது தவிர ஸ்வான் டெலிகாம் நிறுவனம், குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் லிமிடெட், சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட 9 நிறுவனங்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தன. இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தொடங்கியது. மத்திய அமலாக்க பிரிவு தரப்பில் வக்கீல் ராஜசேகர் ஆஜராகி வாதாடினார். அவர் 2 ஜி ஒதுக்கீடு உரிமம் பெறுவதற்காக சட்டவிரோதமான முறையில் பணம் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக கூறினார்.
கலைஞர் டி.வி. ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட 19 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதை தொடர்ந்து மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மே மாதம் முதல் வாக்குமூலம் பெற்றனர். மேலும் விசாரணைகளும் நடந்தன. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த மாதம் முடிவடைந்தன. இதையடுத்து குற்றப்பத்திரிகை மீதான உத்தரவு அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியிடப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் அறிவித்திருந்தது. அதன்படி இந்த விவகாரத்தில் சிபிஐ கோர்ட் நீதிபதி ஷைனி உத்தரவை வெளியிட்டார். அமலாக்கபிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 10 தனி நபர்கள் மற்றும் 9 நிறுவனங்கள் மீது உரிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் படி அவர் உத்தரவிட்டார். அதன்படி 19 பேர் மீதும் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120(பி)(கிரிமினல் சதி) மற்றும் பணப்பரிமாற்ற முறைகேடு தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு பதிவு காரணமாக ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் 2 ஜி வழக்குடன் இந்த வழக்கையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும், கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரர் என்ற வகையில் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் அவர் டெல்லி சென்று சிபிஐ கோர்ட்டில் ஆஜராக வேண்டியது வரும். அமலாக்கப்பிரிவு மேற்கொண்டுள்ள இந்த பண பரிமாற்ற வழக்கு விசாரணை வரும் (நவம்பர்) 11ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 தனி நபர்கள் மற்றும் 5 நிறுவனங்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடுவார்கள். அவர்களது மறுப்புகளுக்கு அமலாக்க பிரிவு வக்கீல் விளக்கம் அளிப்பார். வக்கீல்கள் வாதம் முழுமை பெற்ற பிறகு நீதிபதி ஷைனி தீர்ப்பை வெளியிடுவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.