முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த 17ம் தேதி நடை திறக்கப்பட்டது. இவ்வருடம் வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருகை உள்ளது. நடை திறந்த 1 6ம் தேதி மாலை முதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. சில நாட்களில் பக்தர்கள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல காலத்தை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி முதல் தென் மண்டல ஏடிஜிபி பத்மகுமார் தலைமையில் சன்னிதானம் மற்றும் பம்பையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சபரிமலையில் 12 நாட்களுக்கு ஒரு முறை போலீசார் மாற்றப்படுவார்கள். இதனால் கடந்த 16ம் தேதி பொறுப்பேற்ற போலீசாருக்கு பணி நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய போலீசார் இன்று முதல் பொறுப்பேற்க உள்ளனர். இதன்படி சன்னிதானத்தில் ஒரு எஸ்பி தலைமையில் 850க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களில் 10 டிஎஸ்பிக்கள், 25 இன்ஸ்பெக்டர்கள், 65 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இதே போல் பம்பையில் ஒரு எஸ்பி தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் 8 டிஎஸ்பிக்கள், 14 இன்ஸ்பெக்டர்கள், 45 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இவர்கள் தவிர சன்னிதானத்தில் 175 போலீசாரும், பம்பையில் 60 போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் தவிர தலா ஒரு கம்பெனி அதிவேக அதிரடிப்படை போலீசார், கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து