முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் உயிரிழந்த மூவரது குடும்பத்திற்க்கு தலா ரூ.1 லட்சம் கலெக்டர் அ.சிவஞானம், வழங்கினார் .

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர்.-விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.3 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்;அ.சிவஞானம்,  வழங்கினார்கள்.
 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம், தலைமையில் இன்று(10.04.17) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று(10.04.17) மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
 முன்னதாக விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், சின்ன சுரைக்காய்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தஅ.மாரீஸ்வரன் என்பவரின் மகன்பழனிவேல்முருகன்,குமார் என்பவரின் மகன் திரு,ஜெயப்பிரகாஷ் மற்றும் இராஜபாளையம் நகரைச் சேர்ந்தகுமாரவேல் என்பவரின் மகன்ஜோதிவேல் ஆகிய மூவர் 26.06.2016 அன்று நடந்த சாலை விபத்தில் இறந்தமைக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தல ரூ.1,00,000- வீதம் மொத்தம் ரூ.3,00,000-ற்கான மூன்று காசோலைகளை அவர்களது குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்;அ.சிவஞானம்,  வழங்கினார்கள்.
 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்சி.முத்துக்குமரன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி)முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர்செந்தில் ஆறுமுகம், உதவி ஆணையர் (கலால்)சங்கரநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்