முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்களத்தில் தாக்கும் திறனை அதிகரிக்க டாங்குகளில் நவீன ஏவுகணை இணைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : போர்க்களத்தில் தாக்குதல் திறனை அதிகரிக்க டி-90 ரக டாங்குகளில் நவீன ஏவுகணைகளை பொருத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த டி-90 ரக டாங்குகள்தான் நமது ராணுவத்தில் உள்ளது. இதன் தாக்குதல் திறனை அதிகரிக்க ராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த டாங்குகளில் தற்போது லேசர் இன்வர் ஏவுகணை தாக்குதல் அமைப்புதான் உள்ளது. இதை அகற்றிவிட்டு நவீன முறையில் அடுத்த கட்டமான இயந்திர துப்பாக்கிகள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தும்படி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் எதிரிகளின் இலக்குகளை வெகுதூரம் மட்டுமல்லாது அதிக உயரத்திற்கும் டாங்குகளில் இருந்து ஏவுகணை சென்று தாக்கும். இந்த வகையான ஏவுகணைகளில் பகலிலும் இரவிலும் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்க வல்லது.  டாங்குகளில் இருந்து 125 எம்.எம்.துப்பாக்கிகள் மூலம் இந்த நவீன ஏவுகணையை செலுத்தி தாக்க முடியும். எதிரிகளின் நடமாடும் மற்றும் மறைந்திருக்கும் ஆயுத வாகனங்களை தாக்க வல்லது. மேலும் போர்க்களத்தில் உயரமான இடத்திற்கும் சென்று தாக்குதல் நடத்தும் வகையில் டாங்குகளில் மோடுலர் வகை இயந்திரத்தை பொருத்தவும் ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்த வகையான இயந்திரங்கள் 1200 முதல் 1500 குதிரை சக்தி வாய்ந்தவைகளாகும்.

கடந்த பல மாதங்களாக ராணுவத்தை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்து பொருட்கள் மற்றும் தளவாடங்களை வாங்க துணை தலைமை ராணுவ அதிகாரிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில்  போயிங் விமான கம்பெனியிடமிருந்து ரூ.4,168 கோடியில் 6 நவீன போர் ஹெலிகாப்டர்கள் வாங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து