முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் மினி மராத்தான் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் : அமைச்சர் இரா.துரைக்கண்ணு , ஆர்.வைத்திலிங்கம் எம்பி துவக்கி வைத்தனர்

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்வரும் 29.11.2017 அன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மினி மராத்தான் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், மீனவர்களுக்கான படகு போட்டிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலையில் நேற்று (25.10.2017) தொடங்கி வைத்தார்.

 மினி மாரத்தான்

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான 1.5 கிலோ மீட்டர் மினி மராத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தார்கள். ஒட்டப்பந்தயத்தில் 200க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவ்வோட்டபந்தயம் மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், அண்ணாசிலை, அஞ்சல் அலுவலகம் வழியாக பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது. பின்னர், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிக்களுக்கான கைபந்து மற்றும் கபாடி போட்டிகளையும் வேளாண்மைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பேராவூரணி ஒன்றியம் புனல்வாசல் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமினையும், காலகம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாமினை வேளாண்மைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். பின்னர், சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் மீனவர்களுக்கான பாய் மர படகு போட்டியினை தொடங்கி வைத்தார்கள். இப்படகு போட்டியில் 15 பாய்பமர படகுகள் கலந்து கொண்டன.

கடலுக்குள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று இப்படகு போட்டியினை வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டார். தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை மதுக்கூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை திருவோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்; பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கபாடி மற்றும் வாலிபால் போட்டிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்ஒன்றிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கு.பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே.பாரதிமோகன் (மயிலாடுதுறை), சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), .கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், பயிற்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நாகப்பட்டிணம் மண்டல மீன்வளத்துறை இணை இயக்குநர் ரீனாசெல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பி.என்.ராமச்சந்திரன், திருஞானசம்பந்தம், பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மதுக்கூர் பால்கூட்டுறவு தலைவர் துரைசெந்தில், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் குருசேவ், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து