முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் ஏற்பு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நேற்று (11.12.2017) எடுத்துக் கொள்ளப்பட்டது. உறுதி மொழி மனித உரிமைகள் நாள் உறுதிமொழி: " நான் இதன் மூலம் பின்வருமாறு, உளமாற உறுதியளிக்கிறேன். நான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு, செயல்படுத்தப்படுகிற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும் பாதுகாக்கப்படுகிற அனைத்து மனித உரிமைகளின் பால் உண்மையான மற்றும் மாறாத பற்றுறுதி மிக்கவராக இருப்பேன். அந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கான என்னுடைய அலுவல்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன்: நான் எவ்வித வேறுபாடுமின்றி, மனித உரிமைகளையும், அனைவரின் சுயமரியாதையையும் மதித்து நடப்பேன்: நான்,என்னுடைய சொல் அல்லது செயல் அல்லது எண்ணங்கள் வாயிலாக பிறருடைய மனித உரிமைகளை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீற மாட்டேன்: மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நான் எப்போதும் கடைமைப் பற்றுறுதி மிக்கவராக இருப்பேன்." என்றவாறு மாவட்டகலெக்டர் வாசிக்க, அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(பொது) சு.ராமன் மற்றும் அனைத்துஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து