முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனுநீதி நாள் முகாம்

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நெரும்பூர் குறுவட்டம் பெரியகாட்டுபாக்கம் கிராமத்தில் நேற்று மனுநீதி முகாம் நடந்தது.

கால்நடை மருத்துவமுகாம்

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது முன்னிலை வகித்தார். முகாமில் பட்டா மற்றம் புதிய பட்டா உள்ளிட்டவைகள் 8 நபர்களுக்கும், ஸ்மாட்கார்டு 10 நபர்களுக்கும், முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை 34 நபர்களுக்கும், மின்சார விபத்தினால் உயிரிழந்தவருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி உதவி தொகை ரூபாய் 3 லட்சம் 1 நபருக்கும், மொத்தம் 7,08,000 உத்தரவு வழங்கப்பட்டது.

மேலும் பொது மக்களிடம் குறைகள் அடங்கிய 145 மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் பொது மருத்துவ முகாம், கால் நடை மருத்துவ முகாம் உள்ளிட்ட பல முகாம்கள் நடந்தது. நிகழ்ச்சியில் பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து