முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு: பார்லி.யில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே சமீபத்தில் தெரிவித்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடும் அமளி...

சாதி பெயரை சொன்னால் அது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மத சார்பற்றவர்கள் என்று சொல்பவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்று அவர் கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிராக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

கூச்சல்-குழப்பம்

காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப் பகுதிக்கு சென்று மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர்.  இந்த அமளி காரணமாக பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை நடத்த முடியாமல் கூச்சல் இருந்தது. இந்த அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து