எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம் ஆண்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வது வழக்கமாக உள்ளது. இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்றுமாறும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையிலான குழு, முத்தலாக் தடை மசோதாவை தயாரித்தது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா என பெயரிடப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் அறிமுகம் செய்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு புகார்கள்...
கூச்சலுக்கு நடுவே ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, “இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று (நேற்று) நாங்கள் வரலாறு படைத்துள்ளோம். முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு, தங்களை முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக 66 பெண்கள் புகார் செய்துள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து தாமதமாக எழுந்த காரணத்துக்காக கணவர் தன்னை விவாகரத்து செய்ததாக உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த ஒரு பெண் இன்று புகார் செய்துள்ளார்.
எனவே, பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் நீதி கிடைப்பதற்காகவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல. முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உரிமை இருக்கிறதா இல்லையா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும்” என்றார்.
சிறை தண்டனைக்கு எதிர்ப்பு
பின்னர் இந்த மசோதா உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ஜேபிஎன் யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அசாதுதீன் ஒவைசி (ஏஐஎம்ஐஎம்), பி.மஹதாப் (பிஜு ஜனதா தளம்), இ.டி.முகமது பஷீர் (அனைத்து இந்திய முஸ்லிம் லீக்) மற்றும் அன்வர் ராஜா (அதிமுக) உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக பேசினர். குறிப்பாக, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இந்த மசோதா உள்ளதாகவும் இதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். குறிப்பாக, சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் பிரிவை நீக்கக் கோரினர்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் இருந்தபடியே எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், இவர்கள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்காததால் இந்த மசோதா மீது பேச அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், அங்கு தாக்கல் செய்யப்படும்போது இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸ் இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மக்களவையில் அக்கட்சி அமைதி காத்தது.
மசோதா நிறைவேற்றம்
நீண்ட விவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ஆதரவாக போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த மசோதா திருத்தம் எதுவும் இன்றி நிறைவேறியதாக மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா சட்டமானால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் செல்லுபடியாகும். இதன்படி வாய்வழியாகவோ, எழுத்து மூலமோ அல்லது இமெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு ஊடகம் மூலமோ உடனடியாக முத்தலாக் கூறுவது சட்டவிரோதம் ஆகும்.
இந்த சட்டத்தை மீறுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். மேலும் முத்தலாக் கூறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவனிடம் தனக்கும் தனது குழந்தைக்கும் நிவாரணம் வழங்குமாறு கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.