எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி, கல்வித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான தமிழக பள்ளி கலைத் திருவிழா (கலையருவி) விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு, கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 584 மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களையும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 84 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களையும் வழங்கினார்.விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது-
தமிழக பள்ளி கலைத் திருவிழா
தமிழக மாணவ செல்வங்களை புரட்சித்தலைவி அம்மா தன் பிள்ளைகளை போல பாவித்து, மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும். கல்வியை பாதியில் நிறுத்தக் கூடாது. உலகளவில் நமது மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 14 வகையான உதவிகளை மாணவ, மாணவிகளுக்கென செயல்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து நமது முதல்வர் , துணை முதல்வர் , பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களை கல்வியில் சிறந்தவர்களாகவும், மதிப்புமிக்கவர்களாகவும் மாற்றிட ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அத்துடன் அவர்களின் கலை திறனையும் வளர்க்க முடியும் என்பதை இங்கு நடந்த கலை நிகழ்ச்சிகள் மூலம் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு மாணவரின் திறமைகளையும் ஆசிரியர்கள் வெளிகொணர்ந்து நிறைய போட்டிகளில் பங்கேற்று அதிக பரிசுகளை பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிகளில் பங்கேற்ற அனைவரும் இதை வெற்றியின் முதல் படியாக மனதில் நிறுத்தி, அடுத்து வரும் ஆண்டுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும். இளைஞர்களை செல்போன், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட கவனத்தினை சிதைக்கும் பல விஷயங்களில் இருந்து அவர்களை இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதன் மூலம் ஊக்கப்படுத்தலாம். இதை நிருபிக்கும் வகையில் இங்கு சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை செய்த மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாளைய உலகை ஆளும் அடுத்த தலைமுறை ஆகிய நீங்கள் சிறப்பாக கல்வி பயில்வதுடன், கலைகளிலும் திறமையினை வளர்த்து தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு பெருமை ஏற்படுத்திட வேண்டும். நமது மாவட்ட மாணவ, மாணவிகள் அதிகளவில் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பரிசு பெற்று, நமது மாவட்டம் தமிழகத்தில் முதல் மாவட்டமாக திகழ்ந்திட வேண்டுமென பேசினார்.இவ்விழாவில், கலெக்டர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது-
தமிழக அரசு நமது கலாச்சாரம் மற்றும் தொன்மையான கலைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைப் போட்டிகளை பள்ளி அளவில் நடத்தி வருகிறது. 2017-18ம் கல்வி ஆண்டில் நமது மாவட்டத்தில் கலைப் போட்டிகள் நடுநிலைப்பள்ளி அளவில் 25 பிரிவிலான போட்டிகளும், உயர்நிலைப் பள்ளி அளவில் 103 போட்டிகளும், மேல்நிலைப்பள்ளி அளவில் 103 போட்டிகளும் என மொத்தம் 231 வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு, 584 மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. நுண்கலை, இசை, கருவி இசை, நடனம், நாடகம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. நமது கலாச்சாரத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நீங்கள் அதற்கான பயிற்சிகளை பெற்றுள்ளீர்கள். இங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு திறன்மிக்க கலைஞர்களை போல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளீர்கள். இது மிகவும் பெருமைக்குரியதாகும். மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள நீங்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென பேசினார்.முன்னதாக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த 84 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ரூ.4.32 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.முருகானந்தம், டான்பெட் துணைத் தலைவர் கண்ணன்(எ) ராஜூ, ஆவின் சேர்மன் ரமேஷ், அக்ரோ சேர்மன் மகபூப்ஜான், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், முக்கிய பிரமுகர்கள் சுதா கே.பரமசிவம், பரணி சங்கரலிங்கம், ஜெரால்டு, தச்சை மாதவன், கபேரியல் ராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (திருநெல்வேலி) இரா.ஜெயபாண்டி, (தென்காசி) சி.ரதிபாய், திருநெல்வேலி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பொ.சந்திரசேகரன், திருநெல்வேலி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ப.நடராஜன், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் சி. சேது சொக்கலிங்கம், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் த.தனசிங் ஐசக் மோசஸ், சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி த.ஞானஜோதி, பள்ளி தலைமையாசிரியை ந.நூர்ஜிபாய்எபனேசர் உள்பட அலுவலர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.