முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியன் பாட்மிண்டன்: பைனலில் சாய்னா பரிதாப தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜகார்த்தா : இந்தோனேசியாவில் நடந்த இந்தோனேசியன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தைவான் வீராங்கனை தாய் ஜூ யிங்கிடம் தோல்வி அடைந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் கோப்பையை தவறவிட்டார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் 3.5 லட்சம் டாலர் பரிசுத்தொகை கொண்ட இந்தோனேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வந்தது.

நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், இந்திய வீராங்கனையுமான சாய்னா நேவாலை எதிர்கொண்டார் தைவான் வீராங்கனை தாய் ஜூ யிங்.

27 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த போட்டியில், சாய்னா நேவாலை 9-21, 13-21 என்ற நேர்செட்களில் எளிதாக வீழ்த்தினார் தாய் ஜூ யிங். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி ஆட்டம் ஒருதரப்பாக முடிந்து ஏமாற்றம் அளித்தது.
கனுக்கால் காயத்தால் அவதிப்பட்ட சாய்னா சில மாதங்களாக பாட்மிண்டன் போட்டியில் விளையாடமல் இருந்து இந்த போட்டியில் பங்கேற்றார், லீக், காலிறுதி, அரையிறுதியில் சிறப்பாக ஆடிய சாய்னா இறுதிப்போட்டியில் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அனைத்தும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

இதற்கு முன் சாய்னா நேவாலுடன் 10 முறை மோதியுள்ள தைவான் வீராங்கனை தாய் ஜூ அதில் 9 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு நடந்த சுவிஸ் ஓபன் போட்டியில் மட்டுமே சாய்னா வென்றுள்ளார் எந்பது குறிப்பிடத்தக்கது. அந்த தோல்விக்கு இப்போது தைவான் வீராங்கனை பழிதீர்த்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து