முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 100வது பிறந்நாள் விழா கொண்டாடும்போதும் அதிமுக ஆட்சியில் இருக்கும் ஒ.பி.ரவீந்திரநாத்குமார் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

 தேனி- புரட்சித்தலைவி அம்மா அவர்;களின் 70வது பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம் தேனியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி சையதுகான் தலைமை தாங்கினார். தேனி எம்.பி ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் ஒ.பி.ரவீந்திரநாத்குமார் பேசும்போது காண்ட்ராக்ட் எடுக்க கம்பம் ராஜாங்கம் செல்லும்போது எடுபிடியாக சென்றவர் தான் தங்கதமிழ்செல்வன். புரட்சித்தலைவி அம்மா காலில் விழுந்து பேரவையின் மாவட்ட செயலாளர் பதவியை பெற்றார். 2004ல் டி.டி.வி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் தோற்க காரணமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். 2009ல் தங்கதமிழ்செல்வன் பாராளுமன்ற தேர்தலில் தோற்றபோது என் தோல்விக்கு டி.டி.வி.தினகரன், ஒ.பன்னீர்செல்வம், மகேந்திரன் ஆகியோரே காரணம் என்று பழிபோட்டார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பரிபூரண குணமடைய வேண்டுமென்று கோவில், சர்ச், மசூதி என பிரார்த்தனை செய்த லட்சோப லட்சம் அதிமுக தொண்டர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அம்மாவின் போட்டோவை காண்பிக்காதவர்கள் ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற அம்மாவின் சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டு, ஒன்றரை கோடி  அதிமுக தொண்டர்களின் எண்ணங்களை குழிதோண்டி புதைத்தனர். இவர்களையெல்லாம் பழனி ஆறுமுகசாமி பார்த்துக் கொள்வார். நாம் புரட்சித்தலைவரின் 100வது பிறந்தநாளை கொண்டாடுவதுபோல் புரட்சித்தலைவி அம்மாவின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் போதும் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து