முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே எம்.எல்.ஏக்கள் கைது நடவடிக்கை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆம் ஆத்மி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆசுதோஷ் கூறுகையில்,

பிரகாஷ் ஜார்வால், அமானத்துல்லா கான் ஆகியோருக்கு எதிராக எந்தவித ஆதாரங்களையும் டெல்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் அளிக்கவில்லை. இருப்பினும் இரண்டு எம்.எல்.ஏக்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இது ஆம் ஆத்மி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து