முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ரசிகை

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ரசிகை ஒருவரால் கண்கலங்கியிருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகராக இடம்பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

தந்தை மீது அதிகமாக பாசம் கொண்ட சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய வளர்ச்சியை காண தனது அப்பா உயிருடன் இல்லையே என்ற வருத்தம் உண்டு. இதை அவரே தெரிவித்து இருக்கிறார்.‘‘இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் அவரது தந்தை நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

அதில் மகனின் சினிமா விருது கேடயத்தை கையில் வைத்துக் கொண்டு தந்தை நிற்கிறார். சிவகார்த்திகேயன் சிரித்த முகத்துடன் மைக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்.ரசிகையின் இந்த ஓவியத்தை பார்த்த சிவகார்த்திகேயன், ‘உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், உணர்ச்சிமயமாகவும் இருக்கிறது.

 அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை. அதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது எனக்கு ஸ்பெஷலானது. நன்றியம்மா. தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் தந்தை அன்பின் முன்னே’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதை அறிந்த அவருடைய ரசிகர்கள் நெகிழ்ந்து போய் இருக்கிறார்கள். ‘அப்பாவின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு அண்ணா’ என்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து