முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனே அருகே லாரி கவிழ்ந்து தொழிலாளர்கள் 18 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புனே, மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே நடந்த விபத்தில் வேலைக்காக லாரியில் சென்ற தொழிலாளர்கள் 18 பேர் பலியாகினர்.

கர்நாடக மாநிலம் விஜயபுராவை சேர்ந்த தொழிலாளர்கள் புனேயில் உள்ள தொழில் பேட்டையில் பணி புரிகின்றனர். வழக்கம்போல் இவர்கள், லாரியில் புனே நோக்கி சென்றனர். மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் சென்றபோது, புனே - பெங்களூரு தேசிய சாலையிலுள்ள அவர்கள் சென்ற லாரி நேற்று விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த 18 பேர் பலியாகினர். இந்த விபத்து அதிகாலை 5.30 மணியளவில் நடந்துள்ளது.

மொத்தம் அந்த லாரியில் 35 பேர் பயணம் செய்துள்ளனர். லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து