முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு 4.5 சதவீதமாக அதிகரிக்கும்: பிரதமர் மோடி

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு 4.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பு 16-வது மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 42 நாடுகளை சேர்ந்த பெட்ரோலியத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்கும்.  எரிபொருள் வளம் மிகுந்த யுகத்திற்குள் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம்.  எரிபொருட்கள் மக்களுக்கு சுத்தமானதாகவும், குறைந்த விலையில் கிடைக்கவும், நிலையான முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நமது அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இளைஞர்களை ஜவுளி, பெட்ரோ கெமிக்கல் மற்றும் பொறியியல் போன்ற தொழில்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வைக்கிறது.  தற்போது உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து