எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஷ்மீர், காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிபா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் மீதான குற்றப்பத்திரிகை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கைது செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை, எங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள் என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம், ரஸா மலைப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி பழங்குடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா திடீரென்று காணாமல் போனார். அதன்பின் 17-ம் தேதி ரஸானா காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அந்தச் சிறுமியின் உடலை உடற்கூறு பரிசோதனை செய்ததில் அவர் கூட்டு பலாத்காரம் செய்தும், போதை மருந்து செலுத்தியும் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, சிறுமி கடத்தப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கோயில் நிர்வாகி சஞ்சி ராம், சிறப்பு சுரேந்தர் வர்மா, அவரின் நண்பர் பர்வேஷ் குமார், அவரின் உறவினரும், மைனர் சிறுவனான பர்வேஷ் குமார் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து ஆதாரங்களை அழிக்கப் பணம் பெற்றதாகக் கூறப்படும் போலீஸ் அதிகாரி தீபக் கஜுரியா, விசாரணை அதிகாரி திலக் ராஜ், துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா ஆகியோரும் சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் மைனர் ஆவார். கைது செய்யப்பட்ட இந்த 8 பேரில் 7 பேர் மட்டும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒருவர் மைனர் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 9-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்தபோது, வழக்கறிஞர்கள் தடுத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இன்று வழக்கு தொடர்பான வழக்கறிஞர்கள் தவிர மற்ற வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி சஞ்சய் குப்தா முன், மாநில சிறப்பு விசாரணைக் குழுவினர் 400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கு தனிக் குற்றப்பத்திரிகையும், சிறார் நீதிமன்றத்தில் உள்ள ஒருவருக்கு தனிக் குற்றப்பத்திரிகையும் தனியாக நகல்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, அடுத்த கட்ட விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறார் ஜாமீன் கோரி மாவட்ட தலைமை நீதிபதியிடம் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை வரும் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார். இந்தக் குற்றப்பத்திரிகையில், சிறுமி ஆசிபா கடத்தப்பட்டது, பலாத்காரம் செய்யப்பட்டது, கொலை செய்தது, திட்டமிட்டு ஆதாரங்களை மறைத்தது போன்ற பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேபோல குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்தச் சிறாருக்கும் இதே பிரிவுகள் தரப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட உடன், குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்பு போலீஸ் விசாரணை அதிகாரி தீபக் கஜுரியா, ''ஆசிபா பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது. தனக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள்'' என்று கோஷமிட்டார்.
சிறுமி ஆசிபா கடத்தி வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படும் கோயிலின் நிர்வாகி சஞ்சிராம் அழைத்துச் செல்லப்படும் போது, அவரின் மகள் மது சர்மா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டார். மேலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் அளிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரும் தங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.