முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேர் விடுதலை

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்மினாருக்கு அருகில் மெக்கா மசூதியில், கடந்த 2007, மே 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் வழக்கில், அசிமானந்த், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளான தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருவர் தப்பிய நிலையில் 5 பேர் மீதான வழக்கு ஐதராபாத் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதராங்கள் இல்லை என கூறி நீதிமன்றம் அனைவரையம் விடுதலை செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து