முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிருகண்டா நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மிருகண்டா நதிநீர்த்தேக்கத்தில் இருந்து 4 ம்தேதி முதல் 6 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோரிக்கை...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், மிருகண்டா நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண்பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண்பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், மிருகண்டா நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 17 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 6 நாட்களுக்கு, வினாடிக்கு 80 கன அடி வீதம், தண்ணீர் திறந்துவிடநான் ஆணையிட்டுள்ளேன்.

பாசன வசதி பெறும்

இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3,190.96 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதைநான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன்கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி்யுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து