எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே: புனேயில் நடைபெற்ற 27வது ஐபிஎல் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஓவர்களில் 97/1 என்ற சிறப்புக்கட்டத்திலிருந்து 20 ஒவர்களில் 169/5 என்று சரிந்தது. பிறகு இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா (56), சூரியகுமார் யாதவ் (44), எவின் லூயிஸ் (47) ஆகியோரது ஆதிக்கத்தினால் 170/2 என்று வெற்றி பெற்றது.
சுரேஷ் ரெய்னா தொடக்க ஷார்ட் பிட்ச் சோதனைகளைக் கடந்து வந்து 47 பந்துகளில் 75 ரன்கள் என்று இறுதி வரை நின்ற போதும் சென்னை எப்படி 185-190 ரன்களை எட்டாமல் போனது என்பது புரியாத புதிர்! தோனி மீண்டும் வைடான யார்க்கர் முயற்சி புல்டாஸை நீட்டிக் கொண்டு அடிக்க கவரில் எவின் லூயிஸ் கையில் போய் விழுந்தது, இது ஒரு திருப்புமுனை என்றால் மெக்லினாகன் இதே ஓவரில் பிராவோவுக்கு ஒரு ஏத்து ஏத்த பாயிண்டில் முடிந்தார், டக் அவுட்.
இந்த இரண்டு விக்கெட்டுகளினால் 143/2 என்று இருந்த சென்னை 144/4 என்று ஆனது.
அன்று பவன் நெகியிடம் எப்படி விக்கெட் கொடுக்க மனம் வந்ததோ ஷேன் வாட்சனுக்கு நேற்று 1 பவுண்டரியுடன் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து 5வது ஓவரின் 2வது பந்தில் குருணால் பாண்டியா பந்தை ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், தொடக்கத்தில் ஜஸ்பிரீத் பும்ரா தன் பவுன்ஸ் மூலம் அம்பாத்தி ராயுடுவின் பேட்டிங் தரத்தை சோதித்தார். ஆனால் பும்ராவை பிறகு வீசுவதற்காக உடனே கட் செய்தார் ரோஹித் சர்மா, ஒருவேளை தொடர்ந்து கொடுத்திருந்தால் வேறு ஒரு தரநிலை பவுலிங்கிற்கு எதிரான ராயுடுவின் பலம் தெரிந்திருக்கும், அவுட் கூட ஆகியிருப்பார்.
ஆனால் அதன் பிறகு ராயுடு அற்புதமாக ஆடினார், அப்படித்தான் அவர் ஆடி வருகிறார். பாண்டியா உண்மையில் நன்றாகவே வீசினார், பவர் ப்ளேயில் அவரது சிக்கன விகிதம் ஓவருக்கு 10 ரன்கள் என்றாலும் ரோஹித் அவரைக் கொண்டுவந்தார். 4 பந்துகள் 2 ரன்கள்தான், ஆனால் கடைசியில் ஒரு கூடுதல் பவுன்ஸ் கொண்ட பந்துக்கு எட்ஜ் பவுண்டரி ஒன்றையும் கடைசியில் மிக அருமையாக புல் லெந்த் பந்தை லாங் ஆஃப் மேல் சிக்ஸரும் அடிக்க ஸ்கோர் 6 ஓவர்களில் 51/1 என்று இருந்தது. முன்னதாக குருணால் பாண்டியாவையும் ஒரு பிளிக் சிக்ஸ் அடித்திருந்தார் ராயுடு, ரெய்னா இறங்கி தன் பாணியில் ஒரு குறுக்குசால் ஓட்டி மிட்விக்கெட்டில் குருணாலை ஒரு சிக்ஸ் அடித்திருந்தார்.
ரெய்னாவுக்கு கடும் ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்கப்பட்டது, அருகில் 3 பீல்டர்களை நிறுத்தி அவரை குதிக்க வைத்தனர். ஆனாலும் நேராக அவரது உடலுக்கு ஷார்ட் பிட்ச் வீசவில்லை. இதனால் ஷார்ட் பைன் லெக் தாண்டி 2 பவுண்டரி அடித்தார், ஷார்ட் பிட்ச் சரியாக வீசத் தெரியவில்லை அல்லது நேற்று அமையவில்லை, இதனால் ரெய்னா செட்டில் ஆகி தனக்குச் சாதகமான, தூக்கத்தில் எழுந்து அடிக்கச் சொன்னால் கூட அடிக்கும் லாங் ஆன் மிட்விக்கெட் பகுதிகளில் ஒரு 40 ரன்கள் பக்கம் அடித்தார். மயங்க் மார்க்கண்டேயை ரெய்னா நேராக ஒரு பவுண்டரி பிறகு ஏறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்ஸ் விளாசினார். முதல் ஓவரில் 3 ரன்கள் கொடுத்த மார்க்கண்டே இந்த ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார். 10 ஓவர்களில் 91/1 என்று இருந்த போது ரெய்னா 17 பந்துகள்ல் 31 என்றும் ராயுடு 32 பந்துகளில் 45 என்றும் இருந்தனர்.
அதன் பிறகு மும்பை நடுஓவர்களை இறுக்கிப் பிடித்தது. ராயுடு 46 ரன்களில் குருணால் பாண்டியா பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 11வது ஓவரில் 6 ரன்கள், 12 வது ஓவரில் ராயுடு விக்கெட்டுடன் 2 ரன்கள், 13வது ஓவரில் பும்ரா அபாரமாக வீச தோனி, ரெய்னா இருந்தும் 1 ரன் மட்டுமே வந்தது. மீண்டும் 14வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. 15வது ஓவரில்தான் தோனியிடம் சிக்கினார் பாண்டியா, லாங் ஆஃபில் பந்து நசுங்கிவிடும் போல் ஒரு அறை, பிறகு அசட்டுத்தனமாக தோனிக்கு ஒரு ஷார்ட் பிட்ச் முயற்சி செய்ய மிட்விக்கெட்டில் விளாசினார்.
மயங்க் மார்க்கண்டே ஓவரில் தோனிக்கு ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை இஷான் கிஷன் விட்டார்.. (உஷ்!) மறுபடியும் கிரிக்கெட்டின் எழுதப்படாத விதியின் படி கேட்ச் விட்டாலோ, ஸ்டம்பிங் விட்டாலோ என்ன ஆகும், தோனி அடுத்த பந்தை ஒரு ஸ்டெப் எடுத்து வைத்து லாங் ஆன் ஸ்டாண்ட்சுக்கு அனுப்பினார். அடுத்த ஓவரில் ரெய்னா பும்ராவின் இரண்டு மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 35 பந்துகளில் அரைசதம் கண்டார்.
மெக்லினாகன் திருப்பு முனை ஓவர்:
17 ஓவர்கள் முடிவில் 143/2. ரெய்னா, தோனி என்ற இறுதி ஓவர் விளாசல் ஜோடி களத்தில், ஆனால் மெக்லினாகன் வேறு சில யோசனைகளைத் தன் வசம் வைத்திருந்தார்.
18வது ஓவரில் தோனிக்கு அனைவரும் செய்யும் வைடு ஆஃப் திசை பந்தை வீசினார், இம்முறை இது புல்டாஸ், தோனி நீட்டிக்கொண்டு அடித்தார் டீப் கவரில் கேட்ச் ஆகி 26 ரன்களில் வெளியேறினார்
ரெய்னா ஒரு ரன் எடுத்து பிராவோவிடம் ஸ்ட்ரைக் கொடுக்க மெக்லினாகன் கூடுதல் பவுன்ஸ் செய்தார், பிராவோவின் புல்ஷாட் மார்க்கண்டேயிடம் லெக் சைடில் கேட்ச் ஆனது, டக் அவுட் ஆனார் பிராவோ. கடைசியில் பும்ரா ஷார்ட் பிட்ச்சை ரெய்னா ஒரு சிக்சர், மீண்டும் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி பந்தில் இன்னொரு சிக்சரை ரெய்னா அடிக்க சென்னை அணி 169/5 என்று முடிந்தது. ரெய்னா 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 75 நாட் அவுட்.
ரோஹித், சூரியகுமார் யாதவ் அபாரம்:
காட்டடி மன்னன் எவின் லூயிஸ் சரியாக ஆடவில்லை, அவரது பேட்டிங் எடுபடவில்லை. 26 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார், ஆனால் அவருக்கென்றே வந்து சிக்கிய இம்ரான் தாஹிரை கவரில் ஒரு அரக்க சிக்சரையும் அதேஓவரில் லாங் ஆனில் பந்து இறங்குமா என்ற சந்தேகம் எழுமாறு இன்னொரு சிக்சரையும் அடித்தார் லூயிஸ்.
அடுத்த வாட்சன் ஓவரில் ரோஹித் சர்மா லாங் ஆஃபில் ஒரு கையில் சிக்ஸ் அடித்தார். அவரது பாட்டம் ஹேண்ட், மட்டையின் பவர் ஆகியவற்றினால் சிக்ஸ் ஆனது. பிறகு வாட்சனை ஸ்வீப் சிக்ஸ். இது ஸ்வீட் சிக்ஸ்.
முன்னதாக சூரிய குமார் யாதவ், எவின் லூயிஸ் திணறலுக்கு ஈடு கட்டி தனது அபாரமான பார்மைத் தொடர்ந்து பயன்படுத்தி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் விளாசி ஹர்பஜன் பந்தை புல் ஷாட் ஆட ஜடேஜா இடது புறம் ஓடி பிறகு டைவ் அடித்து கிளாஸ் கேட்சை எடுக்க ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 71/1 என்று நல்ல நிலையில் இருந்தது மும்பை.
அதன் பிறகு தோனியின் களவியூகத்துடன் விளையாடினார் ரோஹித் சர்மா, பிராவோவை ஒரு புல்ஷாட் பவுண்டரி, வாட்சனை தூக்கி அடித்த ஒரு பவுண்டரி என்று ரோஹித் தன்னை வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா வாட்சனின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி லாங் ஆனில் அனாயசமாக ஒரு சிக்ஸ் அடித்தார்.
கடைசி 2 ஓவர்களீல் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூரை 4 பவுண்டரிகள் விளாசினார். அன்று பந்தை சாத்துக்குடியாகப் பிழிந்து டிவில்லியர்ஸுக்குக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார், நேற்று ஃபுல் லெந்த்தில் வீசி ரோஹித்திடம் சிக்கினார். அதுவும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை ஸ்வீப் அடித்து பவுண்டரிக்கு அனுப்பியது தாக்கூர் ரக பவுலிங்கிற்கு ஒரு பாடம். இந்த ஷாட் ரோஹித் சர்மாவின் அரைசதமானது. 20வது ஓவரில் வெற்றி வந்தது. சாஹர் காயமடைந்ததும் ஒரு பின்னடைவுதான். ரோஹித் சர்மா ஆட்ட நாயகன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.