முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மீது காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாக மெகபூபா முப்தி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தியிருப்பது, பிரதமர் மோடி மீது காஷ்மீர் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகரித்திருப்பதாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற கிஷண்கங்கா நீர்மின் திட்டப் பணித் தொடக்க விழாவில், இதுகுறித்து அவர் பேசியதாவது,
ரமலான் மாத காலத்தில் ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது, மக்கள் மத்தியில் பிரதமர் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. துணிச்சலான முடிவை எடுத்துள்ள பிரதமரால் மட்டுமே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தற்போதைய நிலையில் இருந்து மீட்டு, நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று மக்கள் எண்ணுகின்றனர் என்று தெரிவித்தார் மெகபூபா முப்தி.

அப்போது, பாகிஸ்தான்-இந்தியா இடையேயான உறவில் இயல்பு நிலையை ஏற்படுத்த பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளையும் மெகபூபா பட்டியலிட்டார்.

ரமலான் நோன்பை ஜம்மு-காஷ்மீர் மக்கள் அமைதியாக கடைப்பிடிக்க ஏதுவாக, ரமலான் மாதத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று, பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து