முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் 2 இந்திய வீரர்கள் சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதியில் நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் தாக்குதல் நடத்தினர். எனினும் இந்த மோதலில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் அக்னூரில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை அக்னூரில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதிகாலை யாரும் எதிர்பார்க்காத வேளையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருநாட்டு ராணுவத்துக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து