முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பகுதி வழியாக மேற்கொள்ளும் அமர்நாத் யாத்திரை  மீண்டும் தொடங்கியது.

மழை காரணமாக நிலச்சரிவு, மலைகளிலிருந்து கற்கள் உருண்டு விழுவது உள்ளிட்ட காரணங்களால் பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய பகுதிகள் வழியாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பஹல்காம் பகுதியிலிருந்து யாத்திரை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமர்நாத் யாத்திரைக்கான செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,  அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் வழியாக மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரை வெள்ளிக்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கியது' என்றார்.

பால்தால் வழியாக யாத்ரீகர்கள் கடந்த சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். மாரடைப்பு காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து