முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலாத்கார வழக்கில் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேரள பாதிரியார் மனு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன் தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்ட பெண் ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பாதிரியார்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜாப் மேத்யூ, ஜான்சன் வி.மேத்யூ என்ற 2 பாதிரியார்களை போலீசார் கைது செய்துள்ளனர். சோனி (ஆப்ரஹாம்) வர்கீஸ், ஜேஸ் கே.ஜார்ஜ் என்ற 2 பாதிரியார்கள் தலைமறைவாக உள்ளனர்.

பாதிரியார் சோனி வர்கீஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது. மற்றொரு பாதிரியார் ஜேஸ் கே.ஜார்ஜ் இன்று சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யவார் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து