முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பா.ஜ.க. தோல்வியடைந்துவிட்டது - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பா.ஜ.க. முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்  தெரிவித்தார்
இதுகுறித்து ட்விட்டரில் கூறியுள்ள அவர் 'புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கு இன்றைய தினம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. பா.ஜ.க. முற்றிலும் தோல்வியடைந்துள்ளது'' என்று  குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் ஆம் ஆத்மி அரசு நிர்வாகம் செய்துவந்தாலும் போலீஸ் துறையைப் பொறுத்தவரை மத்திய அரசு தன்னிடமே வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இரு தற்கொலை நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேற்கு டெல்லி காவல்நிலையத்தில் ஒரு 17 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இன்னொன்று, விமானப் பணிப்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் சம்பவம் நடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து