முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் பரிதாப சாவு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர்: மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த கணவன், மனைவி உட்பட 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்கள். அவர்களில் 4 பேரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன். தறித் தொழிலாளி. இவரது மனைவி மைதிலி, மகன் ஹரிகரன் மற்றும் அவரது உறவினர்கள் மேட்டூர் ரெட்டியூர் கோல்நாயக்கன்பட்டியை சேர்ந்த வாணிஸ்ரீ, ரவீணா, வாணிஸ்ரீயின் சகோதரி தனுஸ்ரீ ஆகியோர் மேட்டூர் அருகே உள்ள ரெட்டியூர் காவிரி ஆற்றில் நேற்று காலை 11.30 மணியளவில் குளிக்க சென்றனர். அவர்கள் குளித்து கொண்டிருந்த போது மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் வெள்ளம் சென்றதால் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தங்களை காப்பாற்றும்படி அவர்கள் குரல் எழுப்பினர். ஆனாலும் அனைவரும் வெள்ளத்தின் சீற்றத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்து செல்லப்பட்டு பரிதாபாமாக பலியானார்கள். தனுஸ்ரீயை மட்டும் அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினரும், காவல் துறையினரும் அவர்களை தேடும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். பலியானவர்களில் 4 பேரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து