முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணம் துயரமானது. கலைஞரின் மரணமோ உயரமானது: நடிகர் பார்த்திபன் உருக்கம்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : மரணம் துயரமானது. கலைஞரின் மரணமோ உயரமானது என்று நடிகரும், இயக்குனருமான ரா. பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம்  மாலை 6.10 மணிக்கு. உயிரிழந்தார்.
கருணாநிதி மறைவு குறித்து இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது டிவிட்டர் பதிவில்,

மரணம் துயரமானது. கலைஞரின்
மரணமோ உயரமானது.உயர்ந்த
நோக்கத்தை இளைஞர்களுக்கு
விட்டு செல்வது. அது....
எழுந்தால் விட்டம் தொடலாம்.
எழுத்தால் விண்ணையும் தொடலாம்.
முயன்றால் ...முடியாததை முறியடிக்கலாம்! என்றார்.

உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் பிடித்தவரின் மரணம் தாங்க முடியாத துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் மறைவு செய்தி மனதில் தாங்க முடியாத பாரத்தை இறக்கி வைத்துவிட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து