முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன ராணுவ நடவடிக்கை கூடாது: ஜப்பான்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு,இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ராணுவ நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் இட்சுனோரி ஒனடேரா,

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கை மீதான சீன அரசின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரசு குத்தகைக்கு எடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோருடன் கலந்தாலோசித்துள்ளேன்.

சீனா துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள போதிலும், அப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில், இரு நாடுகளும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக ஒனடேரா தெரிவித்தார்.

ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு நல்லுறவை மேம்படுத்தும் வகையில், ஜப்பான் 2 கடலோரப் பாதுகாப்பு கப்பல்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒனடேரா ஆவார்.
இலங்கையின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 வருடங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளது.

அங்கு தொழிற்சாலைப் பூங்கா ஒன்றைக் கட்டவும், சீனாவுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், துறைமுகப் பகுதியில், சீனா ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படாது என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து