எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,முதல் வகுப்பில் உள்ளவர்கள் டி.வி. வைத்துக் கொள்ள முடியும். சிறைத்துறை விதிகளின்படியே கைதிகளுக்கு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக புழல் சிறை சம்பவம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் பிறந்த மாவட்டமான கடலூரியில் ரூ. 2,15 கோடியில் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவர் அறிவித்தபடியே கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதையும் முதல்வர் செய்து காட்டியுள்ளார்.
பேரறிவாளன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 7 பேரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி விடுதலை செய்யப்படவேண்டும் என்று மத்திய அரசுக்கு சட்டத்தின் அடிப்படையில் கடிதம் அனுப்பிய போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தடை வாங்கியது. அந்த தடையானையில் கலந்தாலேசிப்பது என்று உச்சநீதிமன்றம் ஒரு தெளிவுரை வழங்கியது. கலந்தாலோசிப்பது என்றால் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்படவேண்டும் என்று தெளிவுரை வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு போட்ட வழக்கை முடித்து வைத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது அவர் பரிந்துரை செய்ய எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில் காலதாமதம் இல்லாமல் 48 மணி நேரத்திற்க்குள் அமைச்சரவையை கூட்டி, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றி அது கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழக கவர்னர், சட்டத்திற்கு உட்பட்டு, உச்சநீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்ப்பின் அடிப்படையில் விரைவிலேயே நல்ல முடிவு எடுப்பார். கண்டிப்பாக நம்முடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து நல்ல முடிவை அறிவிப்பார் என்று நம்புகிறோம்.
புழல் சிறையிலே கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த புகைப்படத்தில் இருக்கின்ற கைதி போதை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலே 5 ஆண்டு காலமாக இருக்கிறார். அவருக்கு ஏ கிளாஸ் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு முதல் வகுப்பு அளிக்கவில்லை. நீதிமன்றத்தின் ஆணையின்படி அவருக்கு முதல் வகுப்பு அளிக்கப்பட்டு அரசு மற்றும் சிறைத் துறையின் விதிகளில் என்னவெல்லாம் அளிக்கலாம் என்று இருக்கிறதோ அவை அளிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையின் ஆடையை உடுத்தவில்லை. வேறு ஆடைகளை உடுத்தியுள்ளார் என்று ஊடகத்தில் செய்தி வந்தது. முதல் வகுப்பில் உள்ள சிறை கைதிகள் காலை 7:30 மணியில் இருந்து மாலை வரை வேலை நேரங்களில் மட்டும் சிறை சீருடையையும், மற்ற நேரங்களில் அவர்களது சொந்த உடையினை உடுத்திக் கொள்ளலாம் என்றும் விதி 228-ன் கீழ் உள்ளது
சிறை சுவர்களில் வர்ணம் பூசி கொள்ள அனுமதி உண்டு. அவர்களின் அறைகளில் பூசி கொள்ளலாம். சிறையில் முதல் வகுப்பாக இருந்தாலும் இரண்டாவது வகுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு தொலைக்காட்சி வசதி என்பது உள்ளது. மேலும், முதல் வகுப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி வைத்துக் கொள்ளவும் முடியும். தற்போது குற்றச்சாட்டு எழுந்ததின் அடிப்படையில் ஏ. பிரிவில் இருந்த 18 தொலைகாட்சிகள் அவர்களின் அறைக்கு வெளியே வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செல்போன் வைத்திருந்தது குற்றம்தான். இதற்கு சிறைவாசிகள் மட்டுமல்லசிறையில் பணிபுரிபவர்களும் உடந்தையாக உள்ளனர். இதுபோன்ற
சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் ஒரு செல்போன் கூட உள்ளே போகாத அளவிற்கு அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு முதல்வரின் அறிவுரைபடி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட சிறைவாசிகள் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர். இவ்வாறு அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.